Wednesday, April 30, 2008

டேக் கேர் கோவி!!

என்னதான் எதிர் அணியில் இருந்தாலும் சக மனிதர் ஒருவருக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தா அது நமக்கு கஷ்டமாத்தானே இருக்கு. ரொம்ப சாதாரணமா இப்படி எல்லாம் ஆடினா இப்படித்தான் என்றோ எல்லாம் தலைவிதி என்றோ சொல்லிவிட்டுப் போக முடியும் என்றாலும் அதையும் மீறிய பரிதாபத்தினால் ஐயோ பாவம் எனச் சொல்லி அவருக்காக ஒரு நிமிடம் பிரார்த்திப்பதில்தானே நம் மனிதத்தன்மை இன்னும் முழுதாக மறைந்துவிடவில்லை எனத் தெரிகிறது.

என்ன செய்ய. சில சமயங்களில் நாம செய்யும் வேலை நம்ம கட்டுப்பாட்டில் இல்லாம ஆயிடுது. இதனால நமக்கும் கஷ்டம் நம்ம சுத்தி இருக்கிறவங்களுக்கும் கஷ்டம். இது நாம பண்ணற தப்புனால இருக்கலாம் அல்லது நம்மளையும் மீறின சக்தியினாலும் இருக்கலாம். அந்த மாதிரி ஒரு விஷயம்தான் இப்போ நடந்து போச்சு!! இது கோவியையும் மீறின ஒரு செயலாத்தான் இருக்கு. ஆனா பாவம் அதனால அவருக்கு எவ்வளவு வேதனை! எவ்வளவு சங்கடம்!!

டேக் கேர் கோவி!!



இன்னும் விஷயம் தெளிவாத் தெரியணுமுன்னா இதையும் பாருங்க.



டிஸ்கி 1 : ஃபெராரி அணியின் ரசிகனான எனக்கு மெக்லேரன் அணியின் கோவி என்ற கோவலைனன் எதிர் அணியில் இருப்பவராக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து கொடுமையானது. கடவுளின் கிருபையால் அவருக்கு பெரிதாக அடிபடவில்லை. மீண்டும் அடுத்த போட்டியில் நல்ல படியாக கலந்து கொள்ள என் வாழ்த்துக்கள்.

டிஸ்கி 2: சங்க சிங்கங்களின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகும் அண்ணன் கோவி கண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். டேக் கேர் கோவி!!