Friday, December 31, 2010

ஜே ஜே இல்லாத குறிப்புகள்!

படிக்கும் நல்ல நெஞ்சங்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லா செல்வங்களும் சந்தோஷங்களும் உங்களைச் சேரட்டும்.

இந்த வாரம் தமிழ் பேப்பரில் சில எழுத்துப்பிழைகள், சில வார்த்தைகளின் மூலம் என வழக்கம் போல் எழுதி இருந்தாலும் ரஜினி பட பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போக அதற்கு அவர்கள் போட்ட படம் பற்றித்தான் பேச்சு அதிகமாக இருக்கிறது. படிக்க கீழே இருக்கும் உரலைச் சுட்டிப் பார்க்கவும்.


மன் மதன் அம்பு படம் பார்த்தோம். எல்லாரும் படம் சகிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதினாலோ என்னவோ படம் அந்த அளவு மோசமாகத் தெரியவில்லை.

கமலின் மிகச்சிறந்த ஆக்கமா என்றால் இல்லைதான். க்ரேஸி மோகன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமா என்றால் இருந்திருக்கும்தான். திரைக்கதையில் அபத்தமான ஓட்டைகள் இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வேஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களே என்றால் இருக்கிறார்களேதான்.

ஆனால் சமீபகால நேட்டிவிட்டி என்ற பெயரில் தரப்படும் திராபை இல்லாமல், குத்துப் பாட்டு ஆபாச நடனங்கள் இல்லாமல், அடிதடி சண்டைகள் இல்லாமல், ரத்தக் களறி இல்லாமல், காமெடி என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தக் கூத்துகள் இல்லாமல், மூளையை ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துவிட்டு வர முடிகிறது. பஞ்சதந்திரம், பம்மல் கே ரேஞ்சில் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய தரத்தில்தான் இருக்கிறது.

கமல் தொப்பையும் தொந்தியுமாக ஆகிவிட்டார். இனிமேல் வயதுக்கேற்ற கேரக்டர்கள் செய்வது நலம். மனைவியை இழந்தவராக வருவது, மனைவி மகள் என்று யாரேனும் இறக்கும் பொழுது ஒரு ட்ரேட்மார்க் அழுகையுடன் அழுவது போன்றவற்றில் இருந்து சீக்கிரம் வெளிவருதல் நலம். கே எஸ் ரவிக்குமாரை படத்தில் காணவே இல்லை. எல்லாருக்கும் அவரவர் இடத்தைக் கமல் தர வேண்டும். இசை பற்றிப் பேசாமல் இருப்பதே எல்லாருடைய ரத்த அழுத்தமும் ஏறாமல் இருக்க ஏதானது. இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்.

பெரும்பாலும் இணையத்தில் நன்றாக இருக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போவதும் (அஞ்சாதே, பசங்க, இன்னும் பல), மட்டம் என்று விமர்சிக்கப் படும் படங்கள் (மும்பை எக்ஸ்ப்ரெஸ்) பல எனக்குப் பிடிப்பதும் எப்பொழுதும் நடப்பதுதான். புவிவெப்பமயமாதலினால் இதில் மாற்றமெதுவும் இல்லை. நல்லது.

Comfort Fabric Softner, V Guard Stabilizer போன்ற எழுத்துப்பிழைகளுடான விளம்பரங்களும், ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்.

பிகு: இன்று படம் பார்க்க எங்கள் குடும்பத்துடன் வேறு மூன்று குடும்பங்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். எனவே ஜே ஜே எனக் கூட்டம் இல்லாத என்று தலைப்பைப் படித்துக் கொள்ளவும்.

Wednesday, December 22, 2010

இடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா?

இடக்கரடக்கல் மட்டும் இல்லை, குழூஉக்குறி, மங்கலம் இப்படி சில விஷயங்களைப் பத்தி சொல்லி இருக்கேன்.

Wednesday, December 15, 2010

கண்றாவி!!

மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா கண்ணில் இந்தக் கண்றாவிதான் பட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கோட்பாட்டின்படி நீங்களும் ஒரு தபா பார்த்திடுங்கோ!

கண்றாவி
(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)

Sunday, December 05, 2010

அக்கு வேற ஆணி வேற!

அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே. அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை.

அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு.

இவைதான் அக்கு என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள். இதில் அக்கு என்றால் எலும்பு என்பது ஒரு பொருள் உண்டாகும் அடிப்படை கட்டமைப்பு என்பதாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பொருளின் பாகங்கள் என்பதை விட, ஒரு பொருளின் கட்டமைப்புக்கான (structure / frame) பாகங்களாக இருப்பதை அக்கு என்று சொல்வோமானால் அது எலும்புக்கு ஈடாக வருகிறது. ஆகையால் இந்த இடத்தில் அக்கு என்பதற்கு எலும்புதான் சரியான பொருளாக வருகிறது. ஆனால் அப்படி எடுத்துக் கொண்டோமானால் ஆணி என்ற சொல் வருவதற்கான காரணம் சரியாகப் புரியவில்லை. எல்லாப் பொருட்களுமே ஆணி வைத்துதான் கோர்க்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு தவறான முன்முடிவாகவே எனக்குத் தோன்றியது. எனவே ஆணி என்ற சொல்லுக்கு வேறு என்ன விளக்கங்கள் இருக்கின்றன எனப் பார்க்க அகராதியை நாடினேன்.

ஆணி [ āṇi ] {*}, s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence, மேன்மை; 6. support, foundation, ஆதாரம்; 7. wish, desire, விருப்பம்.

இதுதான் ஆணிக்கு அகராதியில் இருக்கும் விளக்கங்கள். அக்கு என்பதற்கு ருத்திராட்சம் எனப் பார்த்து இருந்ததால் ஒரு வேளை அது கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கத்தை சோதிக்க ஆணி என்ற சொல் வந்திருக்குமோ என்றும் கூட நினைத்தேன். ஆனால் அதுவும் சரியான பொருளைத் தராத எண்ணமே வந்ததால் மேலும் கொஞ்சம் தேடினேன்.

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது. குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி

கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி

எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை நேரடியாக அணுகாமல் மறைபொருளாகப் பார்த்தோமானால், இங்கு ஆணி என்பது விருப்பத்தைக் குறிக்கும் என்று உணரலாம். அதாவது ஒருவனிடம் இருந்து நரம்பு, எலும்பு மட்டுமில்லாமல் அவன் ஆசையையும் நீக்கி எனப் பாடலின் பொருளாகச் சொல்லலாம். கயிறு என்றால் நரம்பு. எக்கு என்றால் எலும்பு என்றும் ஆணி என்றால் விருப்பம் என்றும் பொருள் இருப்பதை முன்னமே பார்த்தோம். எப்படி ஒருவனை பகுதி பகுதியாய் பிரித்து எடுப்பது என்று முடிவானால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம். ஆனால் அவனுள் இருக்கும் ஆசையை எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. பற்றற்ற நிலையை அடைவது என்பது எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை. எனவே ஒரு மனிதனை பரிபூரணமாய் பிரிப்பது என்றால் அவனுள் இருக்கும் ஆசையை வரை தனியாகப் பிரித்து எடுப்பது என்று பொருளாகிறது.

எனவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிப்பது என்றால் பரிபூரணமாகப் பிரித்துப் பார்ப்பது என்பது தெளிவாகிறது. இந்தப் பழமொழியில் அக்கு என்றால் எலும்பு என்பதையும் ஆணி என்றால் நேரடியாக தசை என்றும் மறைபொருளாக விருப்பம் என்றிருப்பதையும் இனி நாம் நினைவில் கொள்வோம்.

(தமிழ் பேப்பரில் 04-12-2010 அன்று வெளி வந்தது)

தமிழ் பேப்பரில் வரும் இலக்கணத் தொடரைப் படிக்கிறீர்களா?



Wednesday, November 17, 2010

ஞாயிறு ஒளி மழையில்...


"இன்று 60 டிகிரி போகப் போகிறதாம்" என்ற ஒற்றை வரி அறிவிப்பிலேயே இந்த ஞாயிறு புட்பால் பார்ப்பது நடக்காத காரியம் என்றானது. நவம்பர் மாதத்தில் இப்படி ஒரு நாள் கிடைப்பது அபூர்வம் என்பதால் வெளியே சென்றாக வேண்டும் என்பது முடிவானாலும், எங்கு செல்லலாம் என்று முடிவு செய்ய முடியாத காரணத்தினால் குழந்தைகளை அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அங்கும் பேச்சு வார்த்தை தொடர்ந்ததில் அரை நாள் ஓடிவிட்டது. நாளை பள்ளி உண்டு எனவே இரவு அதிகம் தாமதம் ஆக முடியாது, நேரத்திற்கு குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டும் என்று மேலும் பல கட்டுப்பாடுகள் வர, ஐம்பது மைல் தொலைவை தாண்டாமல் எதேனும் இடத்திற்குச் செல்லலாம் என முடிவாகியது.

அப்பொழுது...

மேலும் படிக்க தமிழோவியத்துக்கு வாங்க!

Tuesday, November 09, 2010

கமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு நாங்க பராகபுரியில் ரொம்ப பிசியா இருந்தோம். அன்னிக்கு லீவு எல்லாம் கிடையாது என்பதால் ஒழுங்கு மரியாதையாக ஆபீசுக்குப் போனோம். வேலையைப் பார்த்தோம். ஆனால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் என்று அடுத்த வந்த சனி ஞாயிறு ரெண்டு நாளா கொண்டாடித் தள்ளிட்டோமுல்ல. அதை விடுங்க. சொல்ல வந்த விஷயமே வேற.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘Koffee with Anu' என்ற நிகழ்ச்சியில் கமல் கலந்துக்கிட்டாராம். அப்போ கமலைப் பற்றிப் பேசிய முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்னாராம் “வெண்பா எழுதுவது ரொம்பக் கஷ்டம். அதனாலதான் கம்பன் கூட ராமாயணத்தை விருத்தத்தில் எழுதினார். ஆனா கமல் நினைச்சா வெண்பா எழுதுவாரு”ன்னு. என்ன அநியாயம் ஐயா. நீங்க கமல் வெண்பா எழுதுவாருன்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் கம்பனை வம்புக்கு இழுக்கணும். வெண்பா கஷ்டம்ன்னா விருத்தம் மட்டும் சுலபமா என்ன? போகட்டும்.

வெண்பாவை விட்டு ஏன் கம்பர் விருத்தம் எழுதினார் என்பதற்கு பெனாத்தல் ட்விட்டரில் ஒரு காரணம் சொல்லி இருந்தார். பொதுவாக வெண்பா - செப்பல் ஓசை, அதாவது மெசேஜ் டோன். மேட்டரை டப்புன்னு சொல்லிட தோதான டோன். தசரதனுக்கு ராமர் மகனாகப் பிறந்தார்ன்னு சொல்ற மாதிரி.

ஆனா விருத்தம் அகவல் ஓசை, அதாவது அழைக்கிற ஓசை, ரிங் டோன். விதவிதமா அலங்காரம் பண்ணி, வாடா மாப்ளே, ராமர் கதை கேட்டுக்கன்னு சொல்லற மாதிரி. இதுதான் சரியான காரணம் மாதிரி இருக்கு.

கமலுக்கு வெண்பா எழுதச் சொல்லிக் குடுத்த ஈற்றடி “கல்லுஞ்சொல் லாதோ கதை”. எங்க வெண்பா வாத்தி ஜீவ்ஸ் மட்டும் இதைக் கேட்டா அவரு முதுகுலயே ஒரு சாத்து சாத்தி ஏன்யா அனாவசியா மகிழ்ச்சியா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிற வார்த்தைங்க நடுவில் விவாகரத்து வாங்கித் தர. குடும்பத்தைக் கலைக்காம ஈற்றடி தர முடியாதான்னு கேட்டு இருப்பாரு. நல்லவேளை அவரு பார்க்கலை.

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலை. ஆனால் ட்விட்டரில் பெனாத்தல் இது பத்திப் போட்டு இருந்தார். பார்த்தவுடன் சரி நாம இதுக்கு ஒரு வெண்பா எழுதலாமேன்னு முயற்சி செஞ்சேன்.

சொல்லையே கேட்டதால் சும்மாக் கிடந்தவொரு
தொல்லையும் தீர்ந்துதன் தோற்றமும் பெற்றதை
வில்லொடு வந்தவொரு வீரனின் கால்பட்ட
கல்லுஞ்சொல் லாதோ கதை
அப்போ வீட்டில் இருந்த நண்பர் படித்துவிட்டு “டேய் நீ எழுதும் கவிதை(!!) எனக்குப் புரியுதேடா. அது என்ன சொல்லையும் கேட்டு அதை மட்டும் சொல்லு” அப்படின்னார். என் வெண்பாவுக்கே நோட்ஸ் தேவைப்படுதா? அப்ப கமல் வெண்பாக்கு நோட்ஸ் போட்டா சாதா கோனார், ராஜக்கோனார் ஆயிருவார் போலன்னு நொந்து போய் கௌதம மகரிஷியின் சாபத்தினால் கல்லாய் கிடந்த தொல்லையானது தீர்ந்து எப்படி அகலிகை தன் தோற்றம் திரும்பக் கிடைக்கப் பெற்றாள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்றேன்.

பெனாத்தலும் அவர் பங்குக்கு சமகால அரசியலைப் பற்றிப் பா ஒன்றைப் போட்டார். அரசியலே உன் பெயர்தான் பெனாத்தலோ! :)

ஆள்வோர் கொடுத்த அரசியல் தானங்கள்
நாள்போய் அறிகின்ற சூத்திரம் - ஆள்படை
அல்லும்பகலும் கீறி அயராது வெட்டியதால்
கல்லுஞ் சொல்லாதோ கதை
அடுத்து நம்ம வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர் வெண்பா என்றவுடன் விட முடியாமல் ஒரு குறட்பாவை கொடுத்தார். இரண்டு அடிகளில் எப்படி பெரிய விஷயங்களைக் கூட அருமையாக சொல்ல முடிகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இது.

வெல்லுஞ் செயலுடை வேந்தர்கள் மூப்பதைக்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வாஞ்சிநாதன் அவர்களும் தனி மடலில் இரண்டு வெண்பாக்களை அனுப்பி வைத்தார்.
அலைகடல் மோதும் அழகுமல்லை மேவுஞ்
சிலையின் நளினஞ் செதுக்கிய நேர்த்தியென்ன
தில்லானா ஆடும் திரைப்படத்தின் மேலாகக்
கல்லுஞ்சொல் லாதோ கதை

சிந்தையில் தேற்றமுடன் செந்தமிழ்நாட் டங்கொண்டோர்
நொந்திடார் யாப்பை நுகத்தடியாய் --- செந்தழலின்
மெல்லிய மேனிசெய சிற்பி முயன்றிடின்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இப்படி எல்லாம் வெண்பாக்கள் கிடைத்த உடனே இந்தப் பதிவைப் போட நினைத்தேன். ஆனால் கமல் இந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள் கிடைக்கவே இல்லை. அவை இல்லாது எப்படிப் போட என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஜெயஸ்ரீ அக்கா அது பற்றிய பதிவு போட்டு இருக்கிறார்கள்.

அதிலும் வெண்பாக்கள் முழுமையாக இல்லை என்றாலும் அது எப்படி இருக்கும் என்று ஒரு அளவிற்குத் தெரிகிறது. அவரின் பதிவில் இருந்தே

*மக…. கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். தனிச்சொல் 'இகமிதிலே' பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

["ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்.." என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

இதற்கு மேல் நான் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. வெண்பாவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த ஈற்றடிக்கு மேலும் சில வெண்பாக்களை எழுதலாமே!

வெண்பா எழுத ஆசை இருக்கிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லையே என்று சொல்லுபவர்கள் உடனடியாக இங்கு செல்லவும்! :)

Monday, October 25, 2010

ஈஸியா எழுதலாம் வெண்பா!

எப்பொழுது வெண்பா மீது என் கவனம் திரும்பியது என்று எனக்கு ஞாபகமே இல்லை. சத்தியமாக பள்ளிப் பருவத்தில் இல்லை. இணையத்தில் நுழைந்து மேயத் தொடங்கிய பொழுது ஆறாம்திணை என்ற தளத்தில் வாஞ்சிநாதன் போட்டு வந்த தமிழ்க் குறுக்கெழுத்து புதிர்களைக் கண்டேன். ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் இருந்ததால் இந்த தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்களிலும் ஆர்வம் வந்தது. அந்தத் தளத்தில் வெண்பாப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. படிக்கும் பொழுது ஒரு சூத்திரத்திற்குட்பட்டு வார்த்தைகளை போடும் விதம் ஒரு வகையில் ஒரு வார்த்தைப் புதிர் போலத்தான் இருந்தது.

பின் 2006-ல் வலைப்பூ ஆரம்பித்து நானும் தமிழ்ப் புதிர்கள் போடத் தொடங்கிய பொழுது நண்பர் ஜீவ்ஸுடன் சேர்ந்து வெண்பா சமைப்பதும் (ஆமாம், அப்படித்தான் சொல்ல வேண்டுமாம்) தொடங்கியது. உபிச பெனாத்தலும் நானும் பல இடங்களிலும் இந்த வெண்பா ஆட்டம் போட்டோம். அப்பொழுது பலரும் வெண்பா விதிகளைப் புரியும் படிச் சொல்லித் தந்தால் நாங்களும் ஆட்டத்திற்கு வருவோமே என்று பலரும் சொல்ல வெண்பா தளத்தில், என் வலைப்பதிவில், நாங்கள் நடத்தி வந்த விக்கி பசங்க வலைப்பதிவில் என பல இடங்களிலும் இது பற்றி எழுதினோம்.


தொடர்ந்து ட்விட்டரில் சேர்ந்த பின் வெண்பாவுடன் வெண்பாம்களும் போடத் தொடங்கினோம். இந்த வெண்பாம் விளையாட்டுக்குக் காரணகர்த்தா பாராதான். இங்கும் பலரும் வெண்பா விதிகள் பற்றிக் கேட்கத் தொடங்கினர். அதே சமயம் வழக்கம் போல நேர் நேர் தேமா என்று வெறும் விதிகளாகச் சொன்னால் எங்களுக்குப் புரியப் போவது இல்லை. எளிமையாக, எங்களால் புரிந்து கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுகளுடன் தர வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு என்பது நன்றாகவே புரிந்தது.


இன்று எனக்கு ஒருவர் சொல்லித் தந்தால் எப்படிச் சொல்லித் தரவேண்டும் என நான் எதிர்பார்ப்பேனோ, அதைப் போல வெண்பா விதிகளை சொல்லிப் பார்க்கலாம் என்று முயன்றேன். எழுதியதை பாராவிடம் காண்பிக்க அவர் நன்றாக வந்திருக்கிறது. இதனை புத்தகமாகவே போட்டுவிடலாம் என்றார். மெருகேற்றிய வடிவம் இப்பொழுது வெளியிடப்பட்டு விட்ட்து.




வெண்பா என்றால் என்ன, அதை எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான ஒரு அறிமுகப் புத்தகம் இது. இதைப் படித்து ஒரு அளவு புரிதல் வந்த பின் மேலும் அறிந்து கொள்பவர்கள் வழமையான புத்தகங்களைத் தேடிச் செல்லலாம். முழுக்க முழுக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே விதிமுறை விளக்கங்களையும், வெண்பா எடுத்துக்காட்டுகளையும் எழுதியுள்ளேன். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சினிமாவையும் தாராளமாக சேர்த்து இருக்கிறேன். படித்து, உங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்.


இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640) இணையத்தில் வாங்குவதற்கு இங்கு க்ளிக்கவும் அல்லது படத்தின் மேல் க்ளிக்கவும்.


பிகு: இதே போன்று தமிழ் இலக்கணம் பற்றி தமிழ் பேப்பரில் நான் எழுதும் தொடரையும் படித்துப் பாருங்கள்.

Wednesday, October 20, 2010

வே.உ.ப.உ.தொ.தொ!!

தமிழ் இலக்கண வகுப்பில் சொல்லித் தந்ததில் பலதும் மறந்து போயிட்டாலும் நினைவில் நிற்கும் இரண்டு பெயர்கள் - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகளும்தான். இப்படி முழ நீளத்துக்கு பெயர் இருக்கிறதுனாலவோ என்னவோ இதுங்க ரெண்டும் மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு.

பெயர் ஞாபகம் இருக்கிறது எல்லாம் சரிதான். ஆனா அப்படின்னா என்னன்னு கேட்கறீங்க இல்லையா! இந்த வேற்றுமை உருபுகள் பத்தி தமிழ் பேப்பரில் சொல்ல ஆரம்பிச்சு இருக்கேன்.

இங்க பாருங்க.

Tuesday, October 12, 2010

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே!

இந்த இலக்கணத் தொடர் ஆரம்பிச்ச வேளையில் இருந்தே நண்பர்கள் எல்லாரும் தமிழில் எப்போ கூடுதலா க், ச் எல்லாம் போடணும். எப்போ போடக்கூடாது அப்படின்னு கொஞ்சம் சொல்லேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதே மாதிரி முதல் ரெண்டு பாகங்களைப் படிச்சவங்க. இன்னும் கொஞ்சம் மெதுவாகப் போகலாம், நிறையா எடுத்துக்காட்டு வேணும், முடிவில் நறுக்கென்று அந்த பாகத்தின் சாரம்சத்தைத் தரலாம்ன்னு நிறைய கருத்து சொல்லி இருந்தாங்க.

இதை எல்லாம் முடிஞ்ச வரை செஞ்சு மூணாவது பாகம் போட்டு இருக்கேன். படிச்சுப் பாருங்க. இன்னும் என்ன செஞ்சா புரிய எளிதாக இருக்கும்ன்னு சொல்லுங்க.

மூணாவது பாகத்தைப் படிக்க இங்க போங்க.

நன்றி.

Thursday, October 07, 2010

கொஞ்சம் பயமாவே இருக்கு!!

பாரா குடுத்த தைரியத்தில் நான் அந்த இலக்கணத் தொடரை ஆரம்பிச்சேன். ஆனா முதல் பகுதிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்தால் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனோன்னு பயமாவே இருக்கு. எதோ எனக்குத் தெரிஞ்சதை எழுதறேன். அடிக்கணமுன்னு முடிவு பண்ணிட்டா தயவு செஞ்சு தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போய் அடிங்க. பப்ளிக்கா வேண்டாம்.

ரெண்டாவது பகுதி இன்னிக்கு ரிலீஸ் - இங்க போய் பார்த்திட்டு, கருத்து சொல்லுங்க.

நன்றி வணக்கம்.

Friday, October 01, 2010

தமிழ் பேப்பரில் கொத்தனார் நோட்ஸ்!

சமீபத்தில் எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. நான் பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ் வேப்பங்காயாகக் கசந்ததிற்கான காரணம் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. அன்றைக்கு இருந்த புத்தகம் ஒரு மாற்றமும் இன்றி இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. ஒரு சேம்பிள்

தனிக் குறிலை அடுத்து வரும் மெய்யெழுத்தை ஈற்றில்கொண்ட சொற்களின்முன் வருமொழி முதலில் உள்ள உயிர் வந்து புணரும்பொழுது நிலைமொழி ஈற்றுமெய் இரட்டித்து இரட்டித்த அந்த மெய்யுடன் உயிர் சேர்ந்து, உயிர்மெய்யாகி புணர்ந்து ஒலிக்கும்.

இப்படி திவச மந்திரம் போல் எழுதி இருந்தால் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்தை எப்படி கவரும்? அவர்களுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் எப்படி வரும்? படிக்கும் காலத்தில்தான் கோட்டை விட்டுவிட்டோம் இப்பொழுதாவது படித்துப் புரிந்து கொள்ளலாமே என்ற ஒரு ஆர்வத்தில் படிக்கத் தொடங்கினேன். தேர்வெழுத வேண்டாம் என்ற நினைப்பு மேலும் தெம்பைத் தந்தது.

பாராவிடம் இது பற்றி சொல்லி அங்கலாய்த்துக் கொண்டிருந்த பொழுது, “குறை சொல்வதை விடுத்து இதனை எளிமையாக எழுதிப் பாருமே” என்றார். ஒரு சிறிய முயற்சி செய்து காண்பித்த பொழுது, நன்றாக வந்திருக்கிறது எனச் சொல்லி ஊக்குவித்தார். சில திருத்தங்களையும் சொன்னார். அவர் சொன்னதின் பெயரில் எனக்குப் புரிந்தவற்றை தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணம்.

இன்று வெளியாகி இருக்கும் தமிழ் பேப்பர் இணைய இதழில் ஒரு தொடராக எழுத ஆரம்பித்திருக்கிறேன். படித்து கருத்தைச் சொல்லுங்கள்.

Monday, September 27, 2010

கும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா!

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள். ஒரு மேட்சைச் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது சென்னை அணி. தோணி ஒரு அதிரடி ஆட்டம் ஆடி அந்த போட்டியை ஜெயித்துக் கொடுத்தார். அரையிறுதியில் நுழைந்த சென்னை அணியினர் அட்டகாசமாக விளையாடி கோப்பையை வென்றது சரித்திரம்.

ChampionTrophy கும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா! அதே போல சேம்பியன்ஸ் ட்ராபியிலும் முதலிரண்டு ஆட்டங்களை எளிதாக வென்றாலும் மூன்றாவது ஆட்டத்தை சூப்பர் ஓவரில் கோட்டை விட்டதால் தென்னாப்பிரிக்க அணியான வாரியர்ஸை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பொழுது அவர்களை கொஞ்சம் போராடியே வென்று அரையிறுதிக்கு சென்றது சென்னை அணி. அதில் அசத்தலாக விளையாடி பெங்களூர் அணியினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. இறுதிப் போட்டிக்கு இவர்களை எதிர்த்து ஆட வந்த அணி முன்பு மோதிய அதே வாரியர்ஸ் அணிதான்.

போன முறை தோற்றதற்கு ஈடு கட்டும் வகையில் விளையாடி அந்த அணியினர் வெல்வார்களா? மீண்டும் ஒரு முறை திறமையாக விளையாடி ஐபிஎல் கோப்பையைத் தொடர்ந்து சேம்பியன்ஸ் கோப்பையையும் சென்னை அணியனர் வெல்வார்களா? என மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியது இந்த இறுதிப் போட்டி. ஐபிஎல் விதிகளின் படி இந்த வருடம் அணிகள் யாவும் கலைக்கப்பட்டு மீண்டும் ஏலத்தில் விடப்படுவார்கள் என்பதால் இந்த அணியினர் விளையாடும் கடைசிப் போட்டி இதுதான் என்று தோணி பலமுறை உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டு ஒரு வெற்றியோடு இந்த அணியினர் தங்கள் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என முனைப்பாக இருப்பதாகவும் சொன்னார்.

மேலும் படிக்க .... தமிழோவியம் பக்கம்

Friday, September 17, 2010

கஜானா - இது தமிழ்ச் சொல்லா?

கஜானா தமிழ்ச் சொல்லா என்று ஒரு கேள்வி. அதில் ஜ என்ற வடமொழி எழுத்து வருவதால் அது தமிழ் இல்லை என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடுகின்றனர். ஆனா அச்சொல்லின் மூலத்தைப் பார்த்தோமானால் அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பது எளிதில் விளங்கும்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே எனத் தொடங்கும் சொற்றொடர் இன்று அரசியல்வாதிகளால் வேண்டாத இடங்களில் எடுத்தாளப்பட்டு அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டாலும் அதில் உண்மை இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.  எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி நம் தமிழ் மொழிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த கஜானா என்ற சொல்லுக்கும் மூலம் நம் தமிழ் மொழிதான் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பண்டைய காலங்களில் இன்று போலல்லாமல் நாணயங்களுக்கு முக்கிய இடம் இருந்தது. செப்பு நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், பொன் நாணயங்கள் என்று பலவித நாணயங்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. சங்க காலத்தில் ஒரு வெள்ளி நாணயத்திற்கு ஈடாக 4 செப்பு நாணயங்களும், ஒரு பொற்காசுக்கு ஈடாக 100 செப்பு நாணயங்களும் வழங்கி வந்திருப்பது வரலாறு.

இந்த நாணயங்களை வைத்திருக்கும் பெட்டியில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒன்றில் செப்பு நாணயங்கள், இரண்டாவதில் வெள்ளி மற்றும் மூன்றாவது பிரிவில் பொன் நாணயங்கள் எனப் பிரித்து வைத்திருப்பார்கள். இந்த பெட்டிகளில் ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக திறக்கும் வசதியும் உண்டு. அந்தந்தப் பிரிவின் முன் அந்த பிரிவில் இருக்கும் நாணயங்களின் மதிப்பாக 1, 4, 100 என்று எழுதி இருப்பார்கள். இவை தமிழ் எண்களின் படி முறையே க, ச, ன என வழங்கப்பட்டு வந்தது. ச மற்றும் னவுக்கான குறியீடு இவ்வெழுத்துக்களில் இருந்து சிறிதே வேறுபட்டு விளங்கினாலும் ஒரு எழுத்தாகப் படிக்கும் பொழுது அவை ச, ன என்றே வழங்கப்பட்டிருந்தது.

இம்மூன்று எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கும் பெட்டியினை தமிழர்கள் கையாளுவதைக் கண்ட வடநாட்டினர் அவர்களுக்கு தெரிந்த தமிழைக் கொண்டு இதை கசன எனப் படித்து அதை அப்பெட்டிகளின் பெயராகவே வழங்கத் தொடங்கினர். இதை அவர்களுடைய உச்சரிப்பில் கஜானா என்றும் உச்சரிக்கத் தொடங்கினர். பணம் வைக்கும் பெட்டியை வழங்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல் பிற்காலத்தில் கருவூலம் என்பதற்கு இணையான சொல்லாக வழங்க பட்டது.

தமிழகத்தில் மகளிர் தங்கள் கச்சுகளில் நாணயங்களை வைத்துக் கொண்டு கடைவீதிகளுக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. இன்றும் அதன் நீட்ச்சியாக பணப்பைகளை அங்கு வைத்துக் கொள்ளும் வழக்கம் இருப்பதை நாம் காண்கிறோம். அன்றைய நாணயங்கள் அணாக்கள் என்று அழைக்கப்பட்டதால், கச்சுகளில் வைத்திருந்த அணா, கச்சணா என்றும் அதுவே மருவி கஜானா ஆனது என்றும் வேடிக்கையாக கதை ஒன்று சொல்லப்படுவது உண்டு.

க/ச/ன -> கசன ->கஜானா என்பதுதான் இச்சொல்லின் வேர்வடிவம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட பெட்டிகளில் நாணயங்கள் வைக்கும் வழக்கத்தில் இருந்தே கஜானா என்ற சொல் வந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இனியும் கருவூலம் என்ற சொல்லைப் பயன்படுத்த தயக்கம் இருந்தால் கசன என்று தூயதமிழில் அதனை அழைக்கலாம் என்பதை நாம் உணர்வோம்.

Posted via email from elavasam's posterous

Saturday, July 31, 2010

வராது வந்த நாயகன்!!


வந்து சேரும் வழியைப் பாருங்கப்பூ!!
இந்த முறையும் போஸ்டர் டைனோவின் கைங்கர்யமே!

Friday, July 30, 2010

அன்புக்கு நான் அடிமை!


அன்புக்கு நான் அடிமை என பெனாத்தலார் சொன்னதை வைத்து அவரை அடிமைகளின் தலைவனாக சித்தரிக்கும் டைனோபாயின் நுகபிநி!

படையெடுக்கும் பெனாத்தலார்

ஒபாமா எங்க ஊருக்கு வந்தாராம். எப்போ வருவாரு, எங்க வருவாருன்னு யாருக்குமே தெரியலை. ஒரு போஸ்டர் உண்டா, பத்து லாரி நிறைய ஆட்கள் உண்டா? என்ன வருகை இது? இப்படியா யாராவது சொல்லாமக் கொள்ளாம வருவாங்க?

ஒரு பெரிய மனுசன் செய்யும் வேலையா இது? இவ்வளவுக்கும் இது அவரு ஆளும் ஊரு. அப்போக்கூட இப்படி. இவங்க எல்லாம் நம்ம ஆட்கள் கிட்டப் பாடம் கத்துக்கணும்ய்யா.

இப்போ இதே பராகபுரிக்கு இன்னும் ஒரு பெரிய மனுசன் வராரு. இப்படியா சைலண்டா வந்துட்டுப் போறாரு.



ஓப்பனா சொல்லறாருப்பா.

இடம்:2 Snowflake Lane, Edison, NJ
நேரம்:ஜூலை 31, 2010 - காலை 10 மணி
தொடர்புக்கு: 917 974 9286

எல்லாரும் வந்து பார்த்துப் பேசி, போட்டோ எடுத்துக்குங்கப்பா. ஆனா ஒண்ணு யாரெல்லாம் வரப் போறீங்கன்னு சரியாச் சொல்லுங்க. பிரியாணி ஏற்பாடு செய்யணமுல்ல. பெனாத்தலார் வருகையை ஒட்டி சில படங்கள்.



பெனாத்தலார் வருகையை முன்னிட்டு சாலையில் சேர் போட்டு மக்கள் காத்திருக்கும் காட்சி!

அரங்க ஒலி ஒளி அமைப்புகளை கவனிக்கும் குழுவினர்.

வழக்கம் போல பெனாத்தலாரின் அசத்தல் போஸ்டர் ஆயில்யன் கைவண்ணம்.

Monday, July 19, 2010

பராகபுரியில் பெனாத்தலார்!



பெனாத்தலைப் பெட்டி கட்ட வைக்க இத்தனை பாடுபடும் ஆயில்யனுக்கு நன்றி! :)

Friday, July 16, 2010

அண்ணன் அழைக்கிறார்!!

PenathalAzaikiraar7


முழு போஸ்டரையும் பார்க்க ஸ்க்ரோல் பாரை கீழே இழுக்கவும்.