Sunday, December 25, 2011

கிறுத்துமஸ் கச்சேரி

இந்த 750 வார்த்தைகள் எழுத ஆரம்பிச்சு அப்பப்போ அது பத்தி ட்விட்டரிலும் பேசிக்கிட்டு இருக்கோம். புதுசா அது பத்திக் கேள்விப்படறவங்க அப்படி என்னதான் எழுதறது புரியலையேன்னு சொல்லறாங்க. சரி, இன்னிக்கு எழுதினது கொஞ்சம் சுமாராக வந்ததால, அதைப் பதிவாப் போட்டுடலாம். அது யாராவது கேட்டா ஒரு சாம்பிளா காமிக்கவும் வசதியா இருக்கும்ன்னு போட்டுட்டேன். 

கிறுத்துமஸ் கொண்டாட்டங்கள், டிசெம்பர் கச்சேரி, சன் டிவி, தமிழுணர்வு, கிரிக்கெட் என வகை வகையாய் கலந்து கட்டி அடிச்சிருக்கேன். எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொன்னா சந்தோஷப்படுவேன். 

கிறுத்துமஸ் கச்சேரி என்ற தலைப்பில் இது தமிழோவியத்தில் வெளி வந்திருக்கு. 

படிச்சுப் பாருங்க.

 

Posted via email from elavasam's posterous

Thursday, December 22, 2011

பிரம்பில்லாத பாரா!

பாரா ஒரு பிரம்படி மாஸ்டர். அவருக்காக வெண்பா புத்தகம் எழுதும் பொழுதும் சரி, கொத்தனார் நோட்ஸ் எழுதும் பொழுதும் சரி, அவர் விதித்த கெடுவிற்குள் நம்மை எழுத வைத்துவிடுவார். அந்நேரங்களில் அவர் மின்னரட்டை செய்ய வந்தால் என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருக்கும். ஆனால் அவர் அப்படி இருந்ததால்தான் என்னை மாதிரியான ஒரு சோம்பேறி கொடுத்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடிந்தது.  இப்பொழுது அவருக்குத் தர வேண்டியது எதுவும் இல்லை என்பதால்தான் எழுதுவது சுணங்கிப் போனது என்பது நிஜம்.

எவ்வளவோ புது முயற்சிகளை நானும் செய்து பார்த்துவிட்டேன். மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று எல்லாமே கொஞ்சம் நாளைக்கு மும்முரமாகப் போகும். அதன்பின் மெதுவாக அப்படியே கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் ஆன கதையாய் காணாமல் போய்விடும். பதிவுகள் எழுதுவதாகட்டும், புதைபுதிர்கள் போடுவதாகட்டும், ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதுவதாகட்டும், புதசெவி பத்திகளாகட்டும், விக்கிபசங்க தளமாகட்டும், எல்லாமே இவ்வழிதான். 


இப்படித் தொடங்கும் என் தற்போதைய மோகம் குறித்த பதிவு தமிழோவியத்தில்! 

Posted via email from elavasam's posterous

Sunday, December 18, 2011

பொடி தோசை மஹாத்மியம்!

இன்னிக்கு ட்விட்டரில் எப்படியோ பொடிதோசை பத்திப் பேச்சு வந்தது. @nchokkan சும்மா இருக்காம பொடிதோசைக்கு எதுகையா சுடிதாரை வெச்சு பாம் போடுன்னு கிளப்பி விட்டாரு. 

அவரு நேரம் இன்னிக்கு வெண்பாமோட நிக்காம வெண்பாவா விழுந்தது. சரி எல்லாத்தையும் ஒரு இடத்தில் சேர்த்து வெச்சுக்கலாமேன்னு ஒரு போஸ்ட்! 

 

பொடிதோசை காரமா போறாது உம்டேஸ்ட்

சுடிதார் தொடவே சுடும்

 

பொடிதோசை காரமோ போனால் தெரியும்

சுடிதார் தொடவே சுடும்

 

பொடிதோசை போராட்டம் போறாத நேரம் 

சுடிதாரைப் போலச் சுடும்

 

பொடிதோசை பொன்னகைகள் போத்தீஸில் பட்டு 

சுடிதாரும் தந்து சுகி

 

பொடிதோசை போல பொடிவெச்ச பேச்சு 

சுடிதாரைச் சேரும் அழகு

 

பொடிதோசை போலவே போகுமே இவர்க்கு

சுடிதாரும் சொல்லிடும் சொல்

 

பொடிதோசைப் பற்றிய பொல்லாத பாம்களையே

சுடிதாரும் படிக்கலைன்னா சுகம்

 

 

தொட்டுக்க ஒரு பாம். 

 

மடிசார் மாமிகை மணக்கும் தோசை

கடிக்க கணந்தோறும் சுகம் - காண்பாய்

பொடிதோசை போல புரையேறும் காரம்

சுடிதாரை கேட்கச் சுடும்

 

@penathal அவர் பங்குக்கு

 

பொடிதோசை போட்டு பொடனியிலும் போடுவதே 

சுடிதார் சுந்தரிகளின் சுயம்! 

 

ஆசை மிகவுற்று ஆடவர் கேட்பாரே

தோசை இரண்டேனும் தாவென-மீசைக்குலம்

அடிமையாய் ஆக்க அடுக்களையே போதும்

சுடிதார் தருவாள் சூடு! 

 

சுடிதார் படித்தால் சுடவேண்டாம் தோசை

விடியாமல் தொடரும் வினை!

 

பொடிவைத்துச் சுட்டவை தோசைகள் மட்டுமல்ல

நடிக்கும் கொத்தனார் நுகபிநி! 

 

பொடிதோசை சுடிதாரும் பொருத்தமாய்ச் சேர்ந்திடவே

முடியாது தொடருது பாம்!

 

அப்படின்னு அடிச்சு ஆடினார். 

 

சொக்கன்

சுடிதார் சுந்தரி சமையல் திறத்தில் 

பொடிதோசை டேஸ்ட்டு பலே - ன்னு ஆரம்பிச்சுட்டு கடைசியில் 

 

பொடியன்என் ஆசைக்குப் பொடிதோசை வெண்பாம்கள் 

அடுக்கடுக்காய்த் தந்தீர், அழகு!  - ன்னு சொல்லி முடிச்சு வெச்சார்!

Posted via email from elavasam's posterous

Tuesday, December 13, 2011

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்!

சீசன் ஆரம்பிச்சாச்சே, நாமும் கலை சேவை செய்ய வேண்டாமா?! அதுக்காக பாடிட முடியுமா? நம்மாலானது ஒரு பதிவு எழுதியாச்சு. தமிழோவியத்தில் அப்பப்போ எழுதணும்ன்னு கணேஷ் சத்தியம் வாங்கி இருக்கார். அதனால அங்க அனுப்பிப் போடச் சொல்லிட்டேன்.

மார்கழிதான் ஓடிப் போச்சு போகியாச்சு – இப்படி ஆரம்பிக்கும் பிரபல திரைப்படப் பாடல் ஒன்று. ஆனால் மார்கழி ஆரம்பித்த உடனே ஒருத்தர் ரெண்டு பேர் என்று இல்லாமல் பெரும் குழாம் ஒன்று வேறு எங்கும் இல்லாத ஓட்டம் ஒன்றைத் தொடங்கும். அது டிசம்பர் சீசன் கச்சேரிகளைக் கேட்க என்றே சென்னையை நோக்கிப் படை எடுக்கும் ரசிகர் கூட்டம். சுமார் ஆறு வார காலம். அதில் ஆயிரக்கணக்கில் கச்சேரிகள். கூடவே நாட்டியங்கள், செய்முறை விளக்கங்கள் என வேறு பல நிகழ்ச்சிகள். பல வாரங்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு சபாவில் என்று எந்த நேரத்தில் யாருடைய கச்சேரி என நிகழ்ச்சி நிரலை பார்த்து தமக்கென ஒரு அட்டவணையை தயார் செய்து கொண்டு காலை, மதியம், மாலை, இரவு என நாள் முழுதும் கலை சேவை செய்ய தயாராகும் ரசிகர்கள். இந்த ஆர்ப்பரிப்பில் கலந்து கொள்ளவென்றே இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமில்லாமல் உலகெங்கிலும் இருந்து சென்னையை நோக்கிப் படையெடுப்பர் பல ஆயிரம் பேர்.


மேலும் படிக்க - தமிழோவியத்துக்கு போங்க

நண்பர் ஒருவரின் ஐயம். எனக்குச் சந்தேகம் எனச் சொல்ல வேண்டுமா இல்லை எனக்கு சந்தேகம் என்பதுதான் சரியா? என்பது அவர் கேள்வி. பதிவு எழுத சான்ஸ் கிடைச்சாச்சுன்னு இதுக்கும் ஒரு பதிவை எழுதிட்டேன். பதில் இங்க இருக்கு - http://tamildoubt.blogspot.com/2011/12/blog-post.html ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடுங்க.

Monday, December 05, 2011

Blessing the sneezes!

When you try to strike a conversation with a stranger, it may always not be reciprocated and sometimes would turn out to be an awkward scene as well. But it is socially accepted when you interact with a stranger and bless him or her, when they sneeze. You will always get a thank you back. This has become an involuntary act for a lot of us. This always reminds me of a funny anecdote. 

There was this young lady, who had the habit of sunbathing in her hedge lined backyard. Assured of the privacy the hedges offered, she would often go nude. But she put an end to that one day when she sneezed and heard her voyeur neighbor responded with a bless you! We are all conditioned to say bless you when someone sneezes. But why are we saying that? 

Before we go there, let us talk about a nursery rhyme and yes, there is a connection!

Ring-a-ring-a-roses,
A pocket full of posies
Atishoo! Atishoo!
We’re all fall down.

We all have sung this song but do we know what it means? There are various versions of this rhyme in different languages, each with its own story. But what I heard in the UK sounded plausible even though experts say this is just an urban myth. The story is that this song was written about the Great Plague that England faced. The typical symptoms were pink colored round rashes that appear on the body and a bout of sneezing and coughing meant that the end is near. There were so many dead that the air smelt of the dead and hence people carried a bouquet of herbs, called the posies, to ward off the smell. Hence Ring of Roses, Pocket full of posies, Sneezing and falling down. 

Coming back to Bless You, during this time, when someone starts sneezing, people around would realize that the end is near and would send for the priest do give the final prayers and blessings. But during the height of the plague, there were so many people dying that there was no time for priests to come and give the final blessings. Therefore, those around took that responsibility. Over a period of time there was no time for a detailed prayer and hence it was shortened to saying 'May God bless you'. Something that survived today.

Thankfully today, sneezing does not mean the end of the road for that person and nor do we mean our wishes to be the final prayers for that person! 

 

Posted via email from elavasam's posterous

Tuesday, November 29, 2011

Watch T M Krishna live! Take part in the December Season!

Live & On-Demand Webcast of Vidwan T.M. Krishna's select Season concerts now available.


 
Watch T.M. Krishna's Concerts live & on-demand this December Season


   Powered by 
unsubscribe from this list | update subscription preferences 



Posted via email from elavasam's posterous

Friday, November 04, 2011

கம்பர்களும் கொம்பர்களும்

ஆண்டாள் சொன்னாள், அருணகிரிநாதர் சொன்னார், கம்பர் சொன்னார், காளமேகம் சொன்னார் என்று பேசிக்கொண்டு இருப்பவர் கவனத்திற்கு. 

 

யாப்பு தேவைகளுக்காக சொற்கள் சில சமயங்களில் மாற்றம் பெறும். செய்யுளில் ஓசையின் தேவைக்காக இந்த மாற்றங்கள் வரலாம். செய்யுளில் உள்ள எல்லா வடிவங்களையும் உரைநடையில் கொண்டு வந்தால் படிக்கிறவனுக்குப் புரியாது. எது எளிமையாகப் புரியுமோ அதை பயன்படுத்துவதே நல்லது. 

 

உதாரணமாக வன்பாற்கண் வற்றல் மரம் தளித்தற்றுன்னு வள்ளுவன் எழுதின குறளில் வன்பால் என்றால் வலிய பாலை. அதற்காக சகாரா பால் என உரைநடையில் எழுதினால் படிக்கிறவனுக்கு என்ன தோணும்? 

 

கம்பன் சூர்ப்பணகைப் படலத்தில் ஓட்டந்தாள் என்று எழுதி இருக்கிறார். ஓட்டந்தாள் என்றால் ஓட்டம் தந்தாள், அதாவது ஓடினாள். இன்று பிடி உஷா ஓட்டந்தாள் என்று இன்று எழுத முடியுமா? கம்பன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற முன்மாதிரியையா இங்கே காட்ட முடியும்? ஓடினார் என்பதுதானே சரியான வடிவம்? அப்படிச் சொன்னால்தானே புரியும்? 

 

ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா? 

 

அதனால் உரைநடையில் அதற்கான சரியான வடிவத்தை பயன்படுத்துவதே நலம். 

 

ஐயா சாமிகளா, இதெல்லாம் நான் சொன்னதுன்னு உடனே கிளம்பி வந்துடாதீங்க. எனக்கு இலக்கணத்தில் சந்தேகம் வந்தால் உடனே கேட்டு சரி செய்து கொள்ள அணுகும் ஹரி அண்ணா அவர்கள் சொன்னது. இதில் இருக்கும் ஏரணத்தைப் புரிந்து கொண்டு நடந்தால் எல்லாருக்கும் நல்லது. 

 

There is right. There is wrong. There is acceptable. There is avoidable. Why are these nuances too difficult for some people to understand?

 

இது மட்டும் நான் சொல்லறது!

 

புத்தம் சரணம் கச்சாமி! 

Posted via email from elavasam's posterous

Friday, October 21, 2011

எழுத்து / இலக்கணப்பிழைகள் இவ்விடம் மொத்தமாகக் கிடைக்கும்

பாரா, சொக்கன், பெனத்தால் இவர்களுடன் என் பதிவுகள், ட்விட்டர் என பல இடங்களிலும் தமிழில் இலக்கணப் பிழைகள், எழுத்துப்பிழைகள் பற்றி பேசி வருகிறோம். ஒரே இடத்தில் இருந்தால் புதிதாக வருபவர்களுக்கும், தேடவும் எளிதாக இருக்கும் என்பதால் ஒரு புதிய பதிவு ஒன்றினைத் தொடங்கி இருக்கிறோம். 

http://tamildoubt.blogspot.com 

இன்று புறம்::புரம் - இவற்றிடையே உள்ள வேறுபாடு பற்றி எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி - http://ow.ly/7595r

புதிய பதிவுக்கு வந்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும். 

Posted via email from elavasam's posterous

Tuesday, October 18, 2011

வாழ்த்துகளா? வாழ்த்துக்களா?

இதுவும் திரும்பத் திரும்ப வர ஒரு கேள்வி. வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது சரி இல்லை. அதே மாதிரிதான் எழுத்துகள், சொத்துகள், முத்துகள் என்று சொல்லறதுதான் சரி. இதுக்கு என்ன ரூல் இருக்குன்னு சிலர் கேட்கலாம். இன்னும் சிலர் வந்து நீ எழுதின கொத்தனார் நோட்ஸ் படிச்சேன். அதுல கூட வன்தொடர்க் குற்றியலுகரம் வந்தா வலி மிகும்ன்னு இருக்கே. பாட்டுப் பாடு, தேக்குப் பலகைன்னு சொல்லிக் குடுத்துட்டு இப்போ வாழ்த்துக்கள்ன்னு மாத்திச் சொல்லலாமான்னு கேட்கறாங்க.

ராசாக்களா, நீங்க அம்புட்டு தூரம் நோட்ஸ் படிச்சு இருக்கீங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா அதே நோட்ஸ்ல நான் இந்த வாழ்த்து மேட்டரும் சொல்லி இருக்கேனே. சரியாச் சொல்லணும்ன்னா அந்த வன்தொடர்க் குற்றியலுகரம் ரூல்தான் இங்கவும் மேட்டர். புணர்ச்சி விதிகள்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா ரெண்டு தனித் தனி வார்த்தைகள் புணரும் பொழுதுதான் அந்த விதிகள் சரியா வரும்.

அப்போ எழுத்து + கள், இதை எடுத்துக்கிட்டோம்ன்னா எழுத்துக்கள் அப்படின்னு வரும். இதுக்கு அர்த்தம் என்ன? கள் போன்ற எழுத்துன்னு அர்த்தம். இல்லையா? ஆனா ஒன்றுக்கு மேற்பட்டன்னு சொல்ல வரும் பொழுது பன்மை விகுதியா கள் அப்படின்னு சேர்க்கறோம். இது விகுதி. இது தனியான சொல் இல்லை. இதைச் சேர்க்கும் பொழுது நம்ம புணர்ச்சி விதிகள் வேலைக்காகாது. பன்மை விகுதியா கள் சேரும் பொழுது வலி மிகுமா மிகாதான்னு விதிமுறைகள் எதுவும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. ஆனா அர்த்தம் ஆகுது அனர்த்தம் ஆகுதான்னு பார்த்து போடச் சொல்லி இருக்காங்க.

கல்கியின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும்.

கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

நாம முன்னாடி பார்த்தா மாதிரி, கள் போன்ற எழுத்து என்பதைக் குறிக்கும் எழுத்து+கள் என எழுதினால் அது எழுத்துக்கள் அப்படின்னு புணரும். அதனால ரெண்டாவது வரியோட பொருள் என்ன ஆகுதுன்னா கல்கியின் எழுத்து கள் போன்றது. அது எனக்குப் பிடிக்கும்ன்னு ஆகுது. நீங்க அதைத்தான் சொல்ல வந்தா எழுத்துக்கள்ன்னு போடுங்க. இல்லையா எழுத்துகள்தான் சரி.

இனிப்புகள் எல்லாருக்கும் தரலாம் ஆனா இனிப்புக்கள் எல்லாருக்கும் தரலாமா? த்ரக்கூடாதுன்னு சட்டமே இருக்குய்யா!

அதே மாதிரி ஒருத்தருக்கு பிறந்த நாள் விருந்துன்னு அம்சமா சியர்ஸ் சொன்னா அது வாழ்த்துக்கள். மனம் நிறைய வாழ்த்தினா அது வாழ்த்துகள்தான்.

முத்து, சொத்து, வித்து - இதை எல்லாம் என்ன சொல்லணும்? இருக்கிறதை எல்லாம் வித்து’க்’கள் வாங்கினா என் சொத்து’க்’கள், அதுவும் முத்து’க்’கள்ன்னு வேணா சொல்லலாம். பன்மையைக் குறிக்க சொல்லணும்னா முத்துகள் சொத்துகள் வித்துகள்தான். முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் அப்படின்னு கவிஞர் ஒருத்தர் எழுதி இருக்காரேன்னு கேட்டா அது சந்தத்துக்கு எழுதறது. இன்னும் சிலர் கூட இந்த மாதிரி பன்மை விகுதி சேர்க்கும் பொழுது வலி மிகுந்து எழுதி இருப்பாங்க.

இதுக்கு தனியா விதிமுறைகள் ஒண்ணும் இல்லை. அதனால நான் இப்படித்தான் எழுதுவேன்னு சொன்னா ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. ஆனா எழுதினா அனர்த்தம் வரக் கூடாதுன்னு பார்த்துக்கணும். அவ்வளவுதான்.

Posted via email from elavasam's posterous

Sunday, October 02, 2011

கோவிலா? கோயிலா?

பலருக்கும் அடிக்கடி வரும் சந்தேகங்கள் லிஸ்டில் கட்டாயம் இதுவும் இருக்கும். இன்னிக்கு ரெண்டு விதமாகவும் பயன்படுத்தறோம். ஆனா கோவிலா கோயிலா எது சரி? 

இந்தக் குழப்பம் இன்னிக்கு நேத்திக்கு வந்தது இல்லை. ரொம்ப காலமாகவே இருக்கும் குழப்பம்தான். இது சம்பந்தமாப் படிக்கும் பொழுது பிழை இல்லாமல் எழுதுவோம் என்ற ஒரு புத்தகத்தில் அந்த காலத்திலேயே இளம்பூரணர் என்பவர் கோயில் என்றும் நச்சினார்கினியர் கோவில்ன்னு எழுதி இருக்கிறதாப் போட்டு இருக்காங்க. 

கோ என்ற சொல்லுக்கே நிறையா அர்த்தங்கள் இருக்கு. பசு, அரசன் என்றெல்லாம் பொதுவாகவே நமக்குத் தெரியும். இறைவன் என்பதும் ஒரு அர்த்தம். அதனால கோ+ இல் (இல்லம் என்பதன் மூலம்) அப்படின்னா கடவுள் உறையும் இடம் அப்படின்னு சொல்லலாம். 

இப்போ இலக்கண விதிகளை எடுத்துக்கிட்டா ரெண்டு வார்த்தைகள் சேரும் போது முதல் வார்த்தையோட கடைசியில் இ, ஈ, ஐ தவிர வேற எந்த உயிர் எழுத்து வந்து முடிஞ்சு, ரெண்டாவது வார்த்தை உயிர் எழுத்தில் ஆரம்பிச்சா, நடுவில் வகரம் வரும். பூ+அழகு இதனாலதான் பூவழகு அப்படின்னு ஆகுது. 

இப்படிப் பார்த்தா கோ+இல் கோவில்ன்னுதான் வரணும். 

ஆனா சிலப்பதிகாரம் போன்ற பழைய நூல்களில் கோயில் அப்படின்னே சொல்லி இருக்கு. கோஇல் அப்படின்னு எழுதி அதை கோயில் எனச் சொல்லி வந்திருப்பாங்களோ என்னவோ. 

பின்னாடி யாராவது கோயில்ன்னு எழுதினா இலக்கண விதிகள் படி சரியா இல்லையேன்னு நினைச்சு கோவில் அப்படின்னு எழுத ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். எதனால் இந்த எக்ஸெப்ஷன்னு கேட்டு தெரிஞ்சா இங்க வந்து அதையும் எழுதறேன். 

முற்காலத்துல கோவில்ன்னு சொல்லாம கோயில்ன்னு சொல்லி இருக்கிறதுனால நாமும் அதை புணர்ச்சி விதிகளில் இருந்து ஒரு எக்ஸெப்ஷனா எடுத்துக்கிட்டு கோயில்ன்னே சொல்லலாம். 

 

Posted via email from elavasam's posterous

Saturday, September 03, 2011

கங்குமில்ல கரையுமில்ல!

மீண்டும் ஒரு சொலவாடை. அதற்கான பொருள் என்ன என்ற வினா! இந்த முறை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தது @rsgiri. ”கங்குமில்லே கரையுமில்லே” அப்டின்னு ஒரு சொல்வழக்கு இருக்கா? இல்லைன்னா சரியான வழக்கு + அர்த்தம் சொல்ல முடியுமா என்று ஆட்டத்தை ஆரம்பித்தார். 

@sanchemist என்ன சார் இப்பிடி கேட்டுட்டீங்க? வள்ளலார் பாடல்ல வருமே “ கங்கு கரை காணாத கடலே “ என வள்ளலாரை கூட்டிக் கொண்டு வந்து கங்கு கரை என்ற சொலவாடை பயன்படுத்தியதற்கு சான்று ஒன்று தந்தார். ஆனால் கங்கு கரை என்பதற்கு பொருள் வரவில்லை என்று விடாக் கண்டனானார் கிரி. 

@kryes கங்கு என்றால் அளவு. கரை என்றால் ஆற்றின் கரை, கடற்கரை என்பதில் வருவது போல எல்லை என்ற பொருள் கொண்டதாகும். கங்கு கரை காணாத கடலே என்றால் அளவில்லாத, எந்த விதமான எல்லையும் இல்லாத கடலே என விளக்கினார். கங்குமில்ல கரையுமில்ல என்றால் அளவில்லாத எல்லையில்லாத என்ற பொருள் கொண்டதாகும் என்றார். 

கிரி என்ன நினைத்தாரோ தெரியாது. வேறு விளக்கங்கள் வேண்டும் என்று நின்றார். 

அவருக்காக ஒரு ஜாலி விளக்கம். 

கங்கு என்பதற்கு பனையோலை மரத்தில் சேரும் இடம் என்ற பொருளும் உண்டு. கரை என்பதைக் கரைதல் என்ற பொருளிலும் பயன்படுத்தலாம். கங்குமில்ல என்றால் பனையோலை மரத்தைப் பற்றும் இடமில்லை என்றுதானே அர்த்தம். இப்போ பனையோலைன்னு சொன்னா, அதை அப்படியே எடுத்துக்காம அதை ஒரு உவமையாக எடுத்துக்கணும். பற்றுதல் இல்லாமல் இருந்தால்ன்னு பொதுப்படுத்தலாம். கரையுமில்ல என்பதை கரை இல்லைன்னு சொல்ல வராம, செய்வோமுல்ல என்று மதுரை தமிழில் சொல்வது போல, கரையுமில்லன்னு எடுத்துக்கலாம். 

அப்போ பற்றற்று இருந்தா நம்ம ஜீவன், கடவுளோட சேர்ந்து ஒண்ணாகி நமக்கு முக்தி கிடைக்கும். இதைத்தான் கங்குமில்ல, கரையுமில்லன்னு எளிமையாச் சொல்லறாங்க! 

இன்னும் ஒரு விதமாச் சொல்லலாமா? 

இப்போ கங்குன்னா தீக்கங்கு.கரைன்னா அழைக்கிறது.கரைத்தனன் அப்படின்னு இலக்கியத்தில் வரும். அப்படின்னா அழைத்தான்னு அர்த்தம். இப்போ ஒருத்தர் பசியோட இருக்காரு. அவரு வீட்டுல சாப்பாட்டுக்கு வழி இல்லை. அடுப்படியில் பூனை தூங்குதுன்னு சொல்லற மாதிரி அவங்க வீட்டில் அடுப்பைப் பத்த வெச்சே நாளாச்சு. சரி நம்ம வீட்டில்தான் சாப்பிட வழியில்லை, நம்ம நிலமை தெரிஞ்ச எவனாவது கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு போடுவானான்னு பார்த்தா எவனும் கூப்பிடலை. திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்து தெருவில் போகும் ஒருத்தர், இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்ன்னு கேட்கறாரு. அதுக்கு இவரு பதில் சொல்லறாரு - “கங்குமில்ல,கரையுமில்ல”! 

வேற எப்படியாவது சொல்ல முடியுமா? 

 

Posted via email from elavasam's posterous

Friday, September 02, 2011

அடி மேல அடி வெச்சா....

என் அண்ணன் அவர் பேஸ்புக்கில் இந்த துணுக்கைப் போட்டு இருந்தார். 

 

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் - அந்தக் காலம்

மீட்டர் மேல் மீட்டர் வைத்தால் க்ரைண்டரும் நகரும் - இந்தக் காலம் ;)”

 

இதற்கு என் பதில் 

 

அடி என்பது ஆசையாக மனைவியைக் கூப்பிடுவது.

அடி மேல் அடி என்பது, தகப்பனார் அடி எனக் கூப்பிடும் அம்மாவின் மீது தான் அடி என அழைக்கும் மனைவியை வைப்பது!

அதாவது அது வரை அம்மா இருந்த இடத்தில் மனைவியை இருத்த, அம்மிக் குழவி ஆயுதமாகப் பறக்கும் என்பது இந்த சித்தாந்தம். 

இதை நவீனப்படுத்துவதன் மூலம் உன் ஆணாதிக்க மனப்பான்மையே வெளியே தெரிகிறது!

Posted via email from elavasam's posterous

Thursday, January 06, 2011

பிழை தீர் - பிழைத்தீர்

தெரிந்ததைச் சொல்லலாம் என ஆரம்பித்தக் கொத்தனார் நோட்ஸ் பகுதி பதினைந்து பாகங்கள் வந்துவிட்டது. ஆனால் இது சரி இது தவறு என்று சொல்லுவது எனக்கே கொஞ்சம் போர் அடித்துவிட்டது. அதனால் அதனை இப்பொழுது முடித்துவிடலாம் என்ற முடிவெடுத்து, நிறுத்திவிட்டேன். இறுதி பாகத்தைப் படிக்க இங்கு செல்லுங்கள்.

ஆனால் பிழைகள் பல கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதிகம் பேர் பிழை செய்யும் சொற்களை எடுத்துக் கொண்டு தொடராக இல்லாமல் எப்பொழுதாவது சில பதிவுகள் போடலாம் என எண்ணம். அதே போன்று எழுதியவற்றிலோ அல்லது எழுதாமல் விட்டவைகளிலோ எதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். பதிவிடும் பொழுது அவற்றையும் எடுத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொடருக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. விரைவில் வேறு ஒரு தலைப்பில் அடுத்த தொடர் ஆரம்பிக்கிறேன்.