Sunday, December 25, 2011

கிறுத்துமஸ் கச்சேரி

இந்த 750 வார்த்தைகள் எழுத ஆரம்பிச்சு அப்பப்போ அது பத்தி ட்விட்டரிலும் பேசிக்கிட்டு இருக்கோம். புதுசா அது பத்திக் கேள்விப்படறவங்க அப்படி என்னதான் எழுதறது புரியலையேன்னு சொல்லறாங்க. சரி, இன்னிக்கு எழுதினது கொஞ்சம் சுமாராக வந்ததால, அதைப் பதிவாப் போட்டுடலாம். அது யாராவது கேட்டா ஒரு சாம்பிளா காமிக்கவும் வசதியா இருக்கும்ன்னு போட்டுட்டேன். 

கிறுத்துமஸ் கொண்டாட்டங்கள், டிசெம்பர் கச்சேரி, சன் டிவி, தமிழுணர்வு, கிரிக்கெட் என வகை வகையாய் கலந்து கட்டி அடிச்சிருக்கேன். எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொன்னா சந்தோஷப்படுவேன். 

கிறுத்துமஸ் கச்சேரி என்ற தலைப்பில் இது தமிழோவியத்தில் வெளி வந்திருக்கு. 

படிச்சுப் பாருங்க.

 

Posted via email from elavasam's posterous

Thursday, December 22, 2011

பிரம்பில்லாத பாரா!

பாரா ஒரு பிரம்படி மாஸ்டர். அவருக்காக வெண்பா புத்தகம் எழுதும் பொழுதும் சரி, கொத்தனார் நோட்ஸ் எழுதும் பொழுதும் சரி, அவர் விதித்த கெடுவிற்குள் நம்மை எழுத வைத்துவிடுவார். அந்நேரங்களில் அவர் மின்னரட்டை செய்ய வந்தால் என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருக்கும். ஆனால் அவர் அப்படி இருந்ததால்தான் என்னை மாதிரியான ஒரு சோம்பேறி கொடுத்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடிந்தது.  இப்பொழுது அவருக்குத் தர வேண்டியது எதுவும் இல்லை என்பதால்தான் எழுதுவது சுணங்கிப் போனது என்பது நிஜம்.

எவ்வளவோ புது முயற்சிகளை நானும் செய்து பார்த்துவிட்டேன். மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று எல்லாமே கொஞ்சம் நாளைக்கு மும்முரமாகப் போகும். அதன்பின் மெதுவாக அப்படியே கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் ஆன கதையாய் காணாமல் போய்விடும். பதிவுகள் எழுதுவதாகட்டும், புதைபுதிர்கள் போடுவதாகட்டும், ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதுவதாகட்டும், புதசெவி பத்திகளாகட்டும், விக்கிபசங்க தளமாகட்டும், எல்லாமே இவ்வழிதான். 


இப்படித் தொடங்கும் என் தற்போதைய மோகம் குறித்த பதிவு தமிழோவியத்தில்! 

Posted via email from elavasam's posterous

Sunday, December 18, 2011

பொடி தோசை மஹாத்மியம்!

இன்னிக்கு ட்விட்டரில் எப்படியோ பொடிதோசை பத்திப் பேச்சு வந்தது. @nchokkan சும்மா இருக்காம பொடிதோசைக்கு எதுகையா சுடிதாரை வெச்சு பாம் போடுன்னு கிளப்பி விட்டாரு. 

அவரு நேரம் இன்னிக்கு வெண்பாமோட நிக்காம வெண்பாவா விழுந்தது. சரி எல்லாத்தையும் ஒரு இடத்தில் சேர்த்து வெச்சுக்கலாமேன்னு ஒரு போஸ்ட்! 

 

பொடிதோசை காரமா போறாது உம்டேஸ்ட்

சுடிதார் தொடவே சுடும்

 

பொடிதோசை காரமோ போனால் தெரியும்

சுடிதார் தொடவே சுடும்

 

பொடிதோசை போராட்டம் போறாத நேரம் 

சுடிதாரைப் போலச் சுடும்

 

பொடிதோசை பொன்னகைகள் போத்தீஸில் பட்டு 

சுடிதாரும் தந்து சுகி

 

பொடிதோசை போல பொடிவெச்ச பேச்சு 

சுடிதாரைச் சேரும் அழகு

 

பொடிதோசை போலவே போகுமே இவர்க்கு

சுடிதாரும் சொல்லிடும் சொல்

 

பொடிதோசைப் பற்றிய பொல்லாத பாம்களையே

சுடிதாரும் படிக்கலைன்னா சுகம்

 

 

தொட்டுக்க ஒரு பாம். 

 

மடிசார் மாமிகை மணக்கும் தோசை

கடிக்க கணந்தோறும் சுகம் - காண்பாய்

பொடிதோசை போல புரையேறும் காரம்

சுடிதாரை கேட்கச் சுடும்

 

@penathal அவர் பங்குக்கு

 

பொடிதோசை போட்டு பொடனியிலும் போடுவதே 

சுடிதார் சுந்தரிகளின் சுயம்! 

 

ஆசை மிகவுற்று ஆடவர் கேட்பாரே

தோசை இரண்டேனும் தாவென-மீசைக்குலம்

அடிமையாய் ஆக்க அடுக்களையே போதும்

சுடிதார் தருவாள் சூடு! 

 

சுடிதார் படித்தால் சுடவேண்டாம் தோசை

விடியாமல் தொடரும் வினை!

 

பொடிவைத்துச் சுட்டவை தோசைகள் மட்டுமல்ல

நடிக்கும் கொத்தனார் நுகபிநி! 

 

பொடிதோசை சுடிதாரும் பொருத்தமாய்ச் சேர்ந்திடவே

முடியாது தொடருது பாம்!

 

அப்படின்னு அடிச்சு ஆடினார். 

 

சொக்கன்

சுடிதார் சுந்தரி சமையல் திறத்தில் 

பொடிதோசை டேஸ்ட்டு பலே - ன்னு ஆரம்பிச்சுட்டு கடைசியில் 

 

பொடியன்என் ஆசைக்குப் பொடிதோசை வெண்பாம்கள் 

அடுக்கடுக்காய்த் தந்தீர், அழகு!  - ன்னு சொல்லி முடிச்சு வெச்சார்!

Posted via email from elavasam's posterous

Tuesday, December 13, 2011

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்!

சீசன் ஆரம்பிச்சாச்சே, நாமும் கலை சேவை செய்ய வேண்டாமா?! அதுக்காக பாடிட முடியுமா? நம்மாலானது ஒரு பதிவு எழுதியாச்சு. தமிழோவியத்தில் அப்பப்போ எழுதணும்ன்னு கணேஷ் சத்தியம் வாங்கி இருக்கார். அதனால அங்க அனுப்பிப் போடச் சொல்லிட்டேன்.

மார்கழிதான் ஓடிப் போச்சு போகியாச்சு – இப்படி ஆரம்பிக்கும் பிரபல திரைப்படப் பாடல் ஒன்று. ஆனால் மார்கழி ஆரம்பித்த உடனே ஒருத்தர் ரெண்டு பேர் என்று இல்லாமல் பெரும் குழாம் ஒன்று வேறு எங்கும் இல்லாத ஓட்டம் ஒன்றைத் தொடங்கும். அது டிசம்பர் சீசன் கச்சேரிகளைக் கேட்க என்றே சென்னையை நோக்கிப் படை எடுக்கும் ரசிகர் கூட்டம். சுமார் ஆறு வார காலம். அதில் ஆயிரக்கணக்கில் கச்சேரிகள். கூடவே நாட்டியங்கள், செய்முறை விளக்கங்கள் என வேறு பல நிகழ்ச்சிகள். பல வாரங்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு சபாவில் என்று எந்த நேரத்தில் யாருடைய கச்சேரி என நிகழ்ச்சி நிரலை பார்த்து தமக்கென ஒரு அட்டவணையை தயார் செய்து கொண்டு காலை, மதியம், மாலை, இரவு என நாள் முழுதும் கலை சேவை செய்ய தயாராகும் ரசிகர்கள். இந்த ஆர்ப்பரிப்பில் கலந்து கொள்ளவென்றே இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமில்லாமல் உலகெங்கிலும் இருந்து சென்னையை நோக்கிப் படையெடுப்பர் பல ஆயிரம் பேர்.


மேலும் படிக்க - தமிழோவியத்துக்கு போங்க

நண்பர் ஒருவரின் ஐயம். எனக்குச் சந்தேகம் எனச் சொல்ல வேண்டுமா இல்லை எனக்கு சந்தேகம் என்பதுதான் சரியா? என்பது அவர் கேள்வி. பதிவு எழுத சான்ஸ் கிடைச்சாச்சுன்னு இதுக்கும் ஒரு பதிவை எழுதிட்டேன். பதில் இங்க இருக்கு - http://tamildoubt.blogspot.com/2011/12/blog-post.html ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடுங்க.

Monday, December 05, 2011

Blessing the sneezes!

When you try to strike a conversation with a stranger, it may always not be reciprocated and sometimes would turn out to be an awkward scene as well. But it is socially accepted when you interact with a stranger and bless him or her, when they sneeze. You will always get a thank you back. This has become an involuntary act for a lot of us. This always reminds me of a funny anecdote. 

There was this young lady, who had the habit of sunbathing in her hedge lined backyard. Assured of the privacy the hedges offered, she would often go nude. But she put an end to that one day when she sneezed and heard her voyeur neighbor responded with a bless you! We are all conditioned to say bless you when someone sneezes. But why are we saying that? 

Before we go there, let us talk about a nursery rhyme and yes, there is a connection!

Ring-a-ring-a-roses,
A pocket full of posies
Atishoo! Atishoo!
We’re all fall down.

We all have sung this song but do we know what it means? There are various versions of this rhyme in different languages, each with its own story. But what I heard in the UK sounded plausible even though experts say this is just an urban myth. The story is that this song was written about the Great Plague that England faced. The typical symptoms were pink colored round rashes that appear on the body and a bout of sneezing and coughing meant that the end is near. There were so many dead that the air smelt of the dead and hence people carried a bouquet of herbs, called the posies, to ward off the smell. Hence Ring of Roses, Pocket full of posies, Sneezing and falling down. 

Coming back to Bless You, during this time, when someone starts sneezing, people around would realize that the end is near and would send for the priest do give the final prayers and blessings. But during the height of the plague, there were so many people dying that there was no time for priests to come and give the final blessings. Therefore, those around took that responsibility. Over a period of time there was no time for a detailed prayer and hence it was shortened to saying 'May God bless you'. Something that survived today.

Thankfully today, sneezing does not mean the end of the road for that person and nor do we mean our wishes to be the final prayers for that person! 

 

Posted via email from elavasam's posterous