Wednesday, December 10, 2014

சக்கர இனிக்கிற சக்கர....

வழக்கம் போல இந்த என். சொக்கன் சும்மா இருக்காம நம்மளை இழுத்து விட்டுட்டாரு. தருமி மாதிரி எதாவது கேள்வியைக் கேட்டுட்டு நாம அல்லாடறதைப் பார்க்க அவருக்கு ஒரு சந்தோஷம். 
இன்னிக்கு கேள்வி சர்க்கரை ஏன் இனிக்குது. இதைச் சும்மாக் கேள்வியாக் கேட்காம ஒரு பாட்டாவே பாடிட்டார். சர்க்கரை இனிக்கிற சர்க்கரை சினிமாப் பாட்டு எல்லாம் இல்லை. இவரே குழந்தைப்பாட்டு ஒண்ணு புனைந்து கேள்வியைக் கேட்டுட்டார். அந்தப் பாடலை இங்க போய் படிச்சுட்டு வந்திடுங்க - https://www.facebook.com/nchokkan/posts/10152643068653292
படிச்சாச்சா? கேள்வியைப் பாட்டாவே கேட்டாப் பதிலையும் அப்படித் தரதுதானே முறை. அதே குழந்தைப்பாடல் மெட்டுல நாமளும் பதில் சொல்லியாச்சு. 

தின்னத் தின்னத் தித்திக்கும்
… தீனியில் சர்க்கரை தானுண்டே
என்ன என்ன காரணத்தால்
… என்றும் இப்படி இனிக்கிறதே? 
உலகில் உள்ள பொருளெல்லாம்
… உண்டா னதுவும் அணுவாலே
பலரும் விரும்பும் சர்க்கரையில்
… பார்ப்பாய் இருவித அணுக்கூறே*
குளுக்கோஸ் மற்றும் ப்ருக்டோஸின்
… குணத்தால் தான்வரும் அவ்வினிப்பே
பளுவை ஏற்றும் சர்க்கரையின்
… பாகம் தானிவைப் பார்த்துக்கோ 
உண்ணும் போது உன்நாக்கில்
… உள்ள பலவகை சுவைமொட்டு
ஊணில் உள்ள ருசிகளையே
… உனக்கு அறியத் தான்தருமே 
இனிப்பை அறியும் மொட்டுகளை
… இந்த இரண்டும் போய்ச்சேர
மனிதர் நரம்பும் மூளைக்கு
… மறக்கா தனுப்பும் சுவைதனையே 
விளக்கம் இதுதான் சர்க்கரையின்
… விஞ்ஞா னமும்நீ அறிந்தாயே
அளவாய் உண்டால் அமிர்தம்தான்
… அதையும் நீயும் அறிவாயே! 
* molecule பொதுவாக மூலக்கூறு என வழங்கப்படும். இரண்டுக்கும் மேற்பட்ட அணுக்களால் ஆன Chemical Compound என்பதை அணுக்கூறு எனச் சொல்லி இருக்கிறேன். பொதுவாக நாம் உண்ணும் சர்க்கரை (சுக்ரோஸ்) குளுக்கோஸ் அல்லது ப்ருக்டோஸ் எனப்படும் அணுக்கூறுகளினால் ஆனவையாகவே இருக்கும். 
சமயத்தில் நம்ம பாட்டைப் படிச்சுட்டு நம்ம கிட்டவே வந்து புரியலை விளக்கஞ்சொல்லுன்னு கேட்பாங்க. அந்தக் கொடுமைக்குக் காத்திருக்க வேண்டாமேன்னு ஒரு பதவுரையும் போட்டுடறேன். 
Sugar is sweet because when our tongue detects a sugar molecule the nervous impulse it sends says "sweet". Sucrose, or table sugar, is formed from two simple sugars: glucose and fructose.

Monday, December 01, 2014

There’s something about Texas…


T.M.Krishna has just concluded a whirlwind tour of the US, performing in about 15 concerts in just over a month. Of those three were in Texas - Houston, Dallas and Austin. In each of these three concerts he sang Bhairavi. I guess there is something in the Texas air that inspires Krishna to sing Bhairavi.  While he sang the Swarajathi Kamakshi Amba in Houston, it was Rama Rama Pranasakhi in Dallas and in his penultimate concert of the tour, in Austin, he sang Sari Evvaramma. And for one who attended all the three concerts it was not a repetitive dose of Bhairavi but an experience of hearing different dimensions of the raga.  I had written earlier about the Houston concert and did a photoblog of the Dallas concerts. Here is my report on the Austin one. 

The schedule took the artists all over the US in a totally random fashion. Before coming to Austin on Saturday, they had performed in Vancouver on Friday and left for Boston for the final concert of the tour on Sunday. They had landed in Austin late afternoon and had to perform within a matter of hours from landing and the concert could not begin in time. But the travails of travel were all forgotten once the first notes were sung.

The concerts of Krishna not being in the standard Kutcheri padhadhi, is now well understood by the audience that during this concert, the organizers made  the announcement about it rather than Krishna having to do it midway during the concert. And a unique concert, it was.

It started with the grand Yadhukula Kambhoji composition of Marimuthu Pillai, Kaalai Thookki Nindru Aadum Dheivame. It lasted nearly thirty minutes and it was bliss all the way. It was followed up by a stand alone Thananam which was sung in multiple ragas - Nattai, Gowlai, Arabhi, Varali and Sri, the ragams in which the famous Pancha Ratna Krithis are set to.

Then Shriramkumar played a very moving ragam rendition in Huseni. Given that Krishna  has moved on to a different ragam when Shriramkumar performs something magnificent like this, I was expecting him to sing a song in a different ragam. But he sang Rama Ninne Nammi with the twist being that he was accompanied just by Arunprakash on the mridangam. Shriramkumar put his violin down and was enjoying the rendition with the rest of the audience.  I understand there is a concert this December in Chennai, where the entire concert would be without any percussion accompaniment. I would love to be there for that one. 

Sri Ramam in Narayanagowlai was next and was sung in such a slow tempo that it was mesmerizing. Then came the main attraction of the day Sari Evvaramma in Bhairavi.  In a typical concert a main piece would be one where there is a lot of raga elaboration, niraval, laya vinyasam (as some percussionists prefer to call thani avardhanam) et al. But again here it was not the case as all of that has been done elsewhere as well. But I call this the main piece as it was the rendition with the greatest impact during this concert. 

Again, the percussionist normally has no say as to when the thani avardhanam would happen and would need to perform in the thalam of the main song of the day. Krishna is democratizing that as well by giving them a choice of a stand alone thani avardhanam in a thalam of the percussionist’s choice. In this concert, Arunprakash played a thani in Misra Jaathi Triputa Thalam and it came after a thanam in Atana and the composition Anubhava Gunambudhi. 

A few quick pieces rounded up the concert. They were the sholkam Vasudeva Sutham and the song Chandana Charchitha in Panthuvarali, Sri Rama Chandra Kripalu in Yamuna Kalyani, Mahakavi Bharathiyar’s Aaduvome Pallu Paaduvome in Maand, Karuniso Ranga in Sahana and Dikshithar’s English Notes composition of Muchukunda Varada. 

It was a concert that met the standards we have come to expect from Krishna and this team. At the end of three hours, the audience were not sated and were wanting more.  But it might be a couple of years before we can hear him live again this side of Atlantic. Then, I wish we get to hear many more of  rare ragas and krithis sung in his inimitable style. 

Tuesday, October 28, 2014

தோசை சுடத்தக்கோர்

இரவுணவின் பொழுது பிள்ளைகளுடன் அரட்டையடிப்பதென்பது ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். அப்போது படிப்பு விஷயங்கள் பேசப்பட மாட்டாது. அனுபவங்கள், வேடிக்கைகள், நினைவுகள், நக்கல்கள், கிண்டல்கள் மட்டுமே. சிரித்து உருண்டு, புரைக்கேறி, கண்ணீர் மல்கி எழுந்தால் ஒருநாள் முழுக்க மனதில் நிறைந்த சலிப்புகளை வெல்லமுடியும்.

அபூர்வமாக பேச்சு உணர்ச்சிகரமாக ஆவதுண்டு. இன்று அப்படி ஒரு சந்தர்ப்பம். மகள் அவளுக்களிப்பட்ட உணவின்பால் சற்றே சலிப்பைக் காட்டினாள். "வீட்டிலே குடுக்கிறதைத்தானே சாப்பிட்டாகணும். நமக்கு ஒருத்தர் உபசரிச்சுட்டு குடுக்கிறதை வேண்டாம்னு சொல்றது மாதிரி கேவலம் ஒண்ணுமே கெடையாது. அவங்களுக்கு கொஞ்சம்கூட மனசு கோணக்கூடாது… நம்ம முகத்திலே நமக்கு அதுபிடிக்கலைன்னு ஒரு சின்ன தடம்கூட தெரியப்பிடாது. அதுதான் நாகரிகம்." என்று சொன்னேன். 

சட்டென்று ஒரு நினைவு. நண்பர் ஜெயப்பிரகாஷும் நானும் ஓரு முறை சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தோம். உடன் நண்பர் சுரேஷும் உண்டு.  சுரேஷ் திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்களே ஆகி இருந்த காலகட்டம் அது. அன்றைய சுற்றல் முடிந்து பின் இரவு தன் வீட்டில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் சுரேஷ். ஜெயப்பிரகாஷ் வழக்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் ஒத்துக்கொண்டுவிட்டார். 

சுரேஷ் அப்பொழுதுதான் வேலை மாறிச் சென்னை வந்திருந்த சமயம். நாங்கள் மூவரும் அவரின் ஸ்கூட்டரிலேயே அவரது வீட்டுக்குப் போனோம். சிறிய வீடு. ஒரு கூடம், சிறிய படுக்கையறை, சமையலறை. நேரமாகிவிட்டிருந்ததனால் போனதுமே கூடத்திலேயே மேஜை போட்டு சாப்பாடு பரிமாறினார்கள். அகலமான பீங்கான் தட்டில் செக்கச்சிவந்த வண்ணத்தில் தோசை. இன்னொரு கிண்ணத்தில் சிவப்பான சாம்பார். அவ்வளவுதான், வேறு எதுவுமே இல்லை.

எனக்குப் பகீரென்றது. ஜேபி தோசைப்பிரியரென்ற தகவல் சுரேஷுக்குத் தெரியும், அவர் மதியம் செய்த சாம்பாரைச் சாப்பிட மாட்டார் என்றுதான் தெரியாது. நல்ல வாசமுள்ள முருங்கைக்காய். பெரிய துண்டுகளாக போட்டு சாம்பார் வைத்திருந்தார்கள். ஜேபிதான் பாவம். முருங்கைக்காய் அவருக்கு ஆகாது. பாக்யராஜ் சினிமா வந்த பொழுது அதை வைத்து  ஜேபியை கிண்டல் செய்திருக்கிறோம். இன்று அந்தக் கிண்டல் செய்யத் தைரியம் உண்டா என்பது சந்தேகமே. அதையும் விட தோசைக்குக் கோழிக் குழம்பு இல்லாமல் அவருக்கு உள்ளேயே இறங்காது. இங்கு தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி, காரச் சட்னி என்று கூட ஏதுமில்லை. அப்படி ஒரு வழக்கமே அவர்கள் வீட்டில் இல்லை போலும். அந்த சாம்பாரைச் சூடாக்கும் எண்ணம்கூட அவர்களுக்கு இருக்கவில்லை.

ஜேபி இளையராஜா இசை குறித்த ஏதோ கேள்விக்கு பதில் சொன்னபடி சாதாரணமாக வந்து அமர்ந்தார். அரைக்கணம் கூட முகம் மாறுபடவில்லை. ஆனால் அரைக்கணத்திற்கும் குறைவான நேரத்தில் என் கண்களை அவர் கண்கள் வந்து சந்தித்து தடுத்துச் சென்றன. நான் திக்பிரமை பிடித்து மேஜை முன் அமர்ந்தேன்.

அருமையான சாம்பார். தோசையும் நல்ல சுவை. ஆனால் எனக்கு மரத்தூள் தொண்டையில் சிக்கியதுபோல இருந்தது. பிறந்த மறுநாளே  மதியம் செய்த சாம்பாருடன் தோசையச் சாப்பிடுவது வழக்கம் என்பது போல ஜேபி  தோசையைச் சாம்பாரில் முக்கிச் சாப்பிட்டார். ஜேபி தோசைப்பிரியர். சுவைத்து மெதுவாக ‘ஸ்டைலாக’ சாப்பிடுவார். அப்படித்தான் இதையும் சாப்பிட்டார்.

அந்த வீட்டுக்கு விருந்தாளிகளே வருவதில்லை போலும். அவர்களுக்கு உபசரிக்கவே தெரியவில்லை. ஏழெட்டுத் தோசைகளையையும் சாம்பாரையும் அந்த அம்மாள் மேஜையிலேயே வைத்துவிட்டாள். மேஜைக்கு சுற்றி ஊரில் இருந்து வந்திருந்த அவர்களின் இரு தங்கைகளும் நின்று நாங்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தார்கள். ஜேபி அந்தப்பிள்ளைகளிடம் அவர்கள் எந்த எப் எம் ரேடியோவில் பாட்டு கேட்பார்கள் என்று கேட்டார். அவர்களுக்குப் பிடித்த ஆர்ஜே யார் என்றெல்லாம் பேசிக் கொண்டே இருந்தார். 

அந்த அம்மாளிடம் அந்தப்பக்கமெல்லாம் ஏதோ இலைகளைப் போட்டு கூட தோசை செய்வார்களே என்றார். அந்த அம்மாள் பரவசத்துடன் ”முருங்கைக்கீரை முருங்கைக்கீரை” என்று சொல்லி அதை வைத்து எப்படி அடை செய்வார்கள் என்று சொன்னாள். ”அருமையாக இருக்கிறது” என்றார் ஜேபி. அவளுக்கு பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கதவு நிலையைப் பற்றிக்கொண்டாள். ”எங்க ஊரிலே அதிகம் முருங்கைக்கீரை உண்டு” என்று  அபத்தமாக உரக்கச் சொன்னாள். ”உங்க ஊர் எது?” ”திருவண்ணாமலை” ”அப்படியா? திருவண்ணாமலையிலே எனக்கு தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு நண்பர் உண்டு” ஊரில் அந்த அம்மையாரின் குடும்பத்தைப்பற்றி நான்கு கேள்விகள் கேட்டு தெரிந்துகொண்டார். அவரது தமிழ் சென்னைத்தமிழ் நெடியடித்தாலும் பிழையில்லாமலிருக்கும்.

அவர்கள்  அத்தனை பேருக்கும் அந்த நாள் ஒரு மாபெரும் நிகழ்வாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. அவர் அருகிலேயே மொத்தக் குடும்பமும் நின்று வாயைப்பிளந்து வேடிக்கை பார்த்தது. பதினைந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். ஜேபி சுரேஷிடமிருந்து நாற்றமான ஒரு சிகரெட்டை வாங்கி புகை விட்டார்.

திரும்பி எங்கள் விடுதி அறைக்கு வந்தபின் கதவைச் சாத்தியதுமே நான் கேட்டேன் ”இதுக்கு முன்னாடி மதியம் செய்த சாம்பாரைச் சாப்பிட்டிருக்கீங்களா சார்?” ”இல்லே…நல்லாவே இல்லியே..ஐஸ்தண்ணி மாதிரி இருக்கே” ”கஷ்டப்பட்டீயளோ?” என்றேன். ஜேபி பதில் சொல்லவில்லை. அவரது இங்கிதங்களை நான் பொருட்படுத்துவதில்லை. ”கஷ்டப்பட்டீயதானே?” என்றேன். ”ஷார்ட்ஸா கொண்டு வந்திருக்கேள்? பெர்முடாப் போட மாட்டேளா?”

தூங்குவதற்காக படுத்தவர் உடனே எழுந்து விட்டார் ”ஒருமாதிரி இருக்கு…” என்றார். ஏதோ மாத்திரை போட்டுக்கொண்டார். ”நீங்க அவங்ககிட்டே முருங்கைக்காய் பத்திச் சொல்லியிருக்கலாம்” என்றேன். ”அந்த வீட்டிலே வேறே ·புட்டே இல்லை. பாத்தேன். நான் சாப்பிடலைன்னா ஏமாற்றத்திலே அவர் அந்தம்மாவை போட்டு அடிச்சாலும் அடிப்பார்..பரவாயில்லை.நாளைக்குச் சரியாயிடும்” நள்ளிரவு வரை ஜேபி விழித்து அவஸ்தைப்பட்டார். மூக்கிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எனக்கு பயமாக இருந்தது. ஏதாவது ஆகிவிடுமா என்று. ”கொஞ்சம் மூச்சு தெணறறது…பரவால்லை” என்றார். 

நானும் விழித்திருந்தேன். விஜய் சதாசிவம் என்ற இலக்கிய விமரிசகர் பற்றி ஜெயப்பிரகாஷ் சொன்னார்.  எல்லாக் கதைகளையும்  கிழி கிழி என்று கிழிக்கும் அவர் கடைசியில் பதாகை என்ற சிற்றிதழில் ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை எழுதினார். ரொம்பவே சுமாரான கதை. ஆனால் அது ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பு என்று சொன்னார் ”உண்மையிலேயே நம்பிண்டிருந்தார், அதான் பிரச்சினையே” என்றார் ஜேபி.  ”இந்தக்கதையை மனசுக்குள்ள அளவுகோலா வைச்சுண்டுதான் அவர் ஜெயனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் கதை எழுதத் தெரியலேன்னு சொல்லிண்டிருந்திருக்கார்” மூக்கு குழாய் போல ஒழுகியது. வாயில் எச்சில் வந்து துப்பிக்கொண்டே இருந்தார். மறுநாள் கிளம்பும்போது முகம் சற்று உப்பியபடி காணப்பட்டதை தவிர்த்தால் ஒன்றுமில்லை. ”இதை நீங்க எங்கயும் சொல்ல வேண்டாம்” என்றார். நான் தலையசைத்தேன்.

நான் சொல்லி முடித்தேன். மகன் பயங்கரமாக மனம் நெகிழ்ந்துவிட்டான். முகம் கலங்கி கண்கள் பளபளத்தன. ” நீ இப்பல்லாம் அவரை பத்தி பேசினா அவரோட இசைரசனை பத்தியே பேசறதில்லை” என்றாள் மகள். ”உண்மைதான். இப்ப யோசிக்கிறப்ப எழுதினது பேசினது சர்ச்சை பண்ணினது எல்லாமே பின்னாலே போயிட்டுது…மனுஷங்க முழுமையா வாழற சில தருணங்கள் இருக்கு…அது மட்டும்தான் மிச்சம்னு தோணுது” என்றேன்.

டிஸ்கி 1: இன்றைக்கு என்ன சாப்பாட்டு என்று நண்பர் ஜேபியை விசாரிக்கப் போக, அவர் மதியம் செய்த சாம்பாரோடு தோசை என அலுத்துக் கொண்டார். இதை கொஞ்சம் கண்ணு காது மூக்கு எல்லாம் சேர்த்து வரலாற்றின் ஏடுகளில் பதிந்து வைக்க வேண்டியது நம் கடமை என்பதால் உடனே இந்த கட்டுரையை எழுதி வைத்துக் கொண்டேன். நாளை மீள்பிரசுரம் செய்ய வசதியாக இருக்கும் பாருங்கள். ஜேபி, நீர் இன்னுமொரு நூற்றாண்டிரும். 

டிஸ்கி 2: மத்தபடி இதுக்கும் இந்த கட்டுரைக்கும் (http://www.jeyamohan.in/?p=5706) சம்பந்தம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டீங்கன்னா அது உங்க கற்பனை வளத்திற்குச் சான்றே அன்றி வேற ஒண்ணுமில்லை. 

டிஸ்கி 3: இந்த கட்டுரைக்கு முதலில் வைத்த பெயர் "ஒண்ணுமில்லாமல் 700 வார்த்தைக் கட்டுரை ஒன்று தேத்துவது எப்படி?"

டிஸ்கி 4: மேற்கண்டவை அனைத்து எழுத்தாளரின் கற்பனையே. சில உண்மைகளும் கலந்திருக்கலாம்.

டிஸ்கி 5: நான் மேற்கண்டவை என்று சொல்லிக் கொண்டது என் பதிவை மட்டும்தான்.

டிஸ்கி 6: அண்ணன் மருத்துவர் விஜய் அவர்களின் கதையைப் படிக்க -  http://padhaakai.com/2014/10/26/medic-story/


Wednesday, October 15, 2014

மீனாக்ஷி ஊரில் காமாக்க்ஷி ஊர்வலம்!

ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி பத்ததி என்கிறார்கள். இப்படி ஒரு நிரலைப் போட்டுத் தந்தது அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். பல காலமாய்த் தொடர்ந்து இதுதான் கச்சேரி என்பதற்கான கட்டமைப்பு. நான் இந்தக் கட்டமைப்பைத் தாண்டி வேறு வடிவங்களில் கச்சேரிகள் கேட்டதே கிடையாது. ஒரு மாலை முழுவதும் ஒரே ராகம் பாடுவார்கள், விடிய விடிய நடக்கும் கச்சேரிகளில் பிரதான ராகம் மட்டுமே பல மணி நேரம் இருக்கும் என்பதெல்லாம் படித்துத் தெரிந்து கொண்டவையே தவிர கேட்டது கிடையாது.
இந்தக் கட்டமைப்புதான் கச்சேரி என்றால் நான் செய்யப் போவது கச்சேரியே இல்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார் டிஎம் கிருஷ்ணா. Like how a conference, that does not adhere to the traditional rules that govern conferences, is called an unconference, his recent performances can be termed as unconcerts or unkutcheris. இதற்கு அக்டோபர் 12ஆம் தேதி ஹூஸ்டனில் நடந்த கச்சேரி, (இப்படி சொல்லலாமா என்றே சந்தேகம் வருகிறதே) இதற்குச் சரியான உதாரணம்.

தொடர்ந்து படிக்க - தமிழோவியம் மின்னிதழ். 

Tuesday, September 23, 2014

அனுமனுக்கு எந்தப் பக்கம் Offside?

பெங்களூர் வந்திருக்கின்றேன். பெங்களூரில் கட்டாயம் செய்ய வேண்டும் என நினைத்தவைகள் ஒன்று இங்கு நடக்கும் கம்பராமாயண முற்றோதல் வகுப்பில் ஒரு முறையேனும் கலந்து கொள்ள வேண்டும் என்பது. நான் சென்ற முறை வந்திருந்த பொழுதுதான் இவ்வகுப்பு தொடங்கியது. இணையத்தில் ஏற்றப்படும் காணொளிகளை அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது, நேரில் இவ்வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுவேறத் தொடங்கியது. பொதுவாக சனிக்கிழமைகளில் நடக்கும் இவ்வகுப்பு சென்ற வாரம் ஞாயிறன்று நடந்தது எனக்கு வசதியாக ஆனது. கொஞ்சம் தாமதமானாலும் சென்றுவிட்டேன். சீர் பிரித்துப் படிக்கக் கற்றுக் கொண்டால் கம்பனின் பாடல்களுக்குப் பெரும்பாலும் உரையே தேவை இல்லை. தேவைப்படும் பொழுது மட்டும் விளக்கமும் மற்ற நேரங்களில் சில தொடர்புடைய செய்திகளையும் சொல்லி ஹரி அண்ணா இந்த வகுப்பினை ஒழுங்கு செய்வது அழகு. 

புதிதாக வந்த என்னையும் பாடல்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள். சில பாடல்களைப் படித்தேன். அப்படிப் படிக்கும் பொழுது பார்த்த பாடல் ஒன்றுதான் இந்த பதிவின் தலைப்பில் இருக்கும் கேள்விக்குப் பதில். முதலில் அது என்ன பாடல் என்பதைப் பார்த்துவிடுவோம். 

எறிந்தன,எய்தன, இடி உரும் என மேல்
செறிந்தன படைக்கலம், இடக் கையின் சிதைத்தான்,
முறிந்தன தெறும்கரி; முடிந்தன தடந் தேர்;
மறிந்தன பரிநிரை-வலக் கையின் மலைந்தான்.

சுந்தரகாண்டம். சம்புமாலி வதைப்படலம். நேத்திக்கு டால்பின்ஸ் டீம் போட்ட பந்தை எல்லாம் கிரவுண்டுக்கு வெளில அடிச்ச ரெய்னா மாதிரி (நானும் நேர்ல மேட்ச் பார்த்ததை சொல்ல வேண்டாமா? ஹிஹி) அனுமன் ராவணன் அனுப்பின சேனை எல்லாத்தையும் அடிச்சு துவம்சம் பண்ணறான். அப்போ இந்த சம்புமாலியை அனுப்பி அந்த குரங்கை அடக்கி கொண்டு வான்னு சொல்லறான் ராவணனன். அந்த சம்புமாலியும் அடிவாங்கிச் சாவறதுதான் இந்தப்படலம். இந்தப் படலத்தோட ஆரம்பத்துல சம்புமாலி யாரு, அவனோட சேனை எவ்வளவு பெருசுன்னு எல்லாம் சொல்லிட்டு அப்புறம் அந்த சேனை என்ன ஆகுதுன்னு சொல்லறதுதான் இந்தப் பாட்டு. 

அனுமன் என்ன பண்ணறானாம், தன் மேல இடி இடிக்கிற மாதிரி வந்து விழும் ஆயுதங்களை இடது கையால் சிதைக்கறானாம். என்ன மாதிரி ஆயுதங்கள்ன்னா எறியப்பட்ட ஆயுதங்கள், எய்யப்பட்ட ஆயுதங்கள் அதாவது வேலும் அம்பும். சினிமாவில் எல்லாம் பார்ப்போமே, அந்த மாதிரி. இடது கையில் இதைச் செஞ்சா வலது கை எதுக்கு? 

சம்புமாலியோட சேனையைப் பத்திச் சொல்லும் போது, கம்பன், அவன் கூடப் போன படையின் அளவு பத்தி சொல்லறாரு. அவன் தேரைச் சுத்திப் பத்தாயிரம் தேர்கள் போச்சாம். அதுக்கு ரெண்டு மடங்கு யானையாம். யானைக்கு ரெண்டு மடங்கு குதிரையாம். குதிரைகளுக்கு ரெண்டு மடங்கு காலாட்படையாம். அதாவது பத்தாயிரம் தேர்கள், இருபதாயிரம் யானைகள், நாற்பதாயிரம் குதிரைகள், எண்பதாயிரம் காலாட்படையினர். சம்புமாலியோட அத்தனை பேர் போறாங்க. இந்தப் படையோட சண்டை போடற அனுமனோட வலக்கை ஒண்ணும் சும்மா இல்லை. யானைகளையும் தேர்களையும் குதிரைகளையும் வலது கையால பின்னி எடுத்துடறானாம். 

குத்துச்சண்டையில் பார்த்தீங்கன்னா தன்னை நோக்கி வரும் குத்துகளில் அடி படாம இருக்க பல வழிகள் இருக்கு. அப்படியே தடுத்து நிறுத்தினா அது block. தடுத்து நிறுத்தாம அதைத் கொஞ்சம் தட்டி அது வரும் பாதையில் இருந்து விலகச் செய்து அந்த குத்துக்கான பாதையில் இருந்து அதனை மாற்றிவிடுவது Parry. இப்படி ஒரு கையால் நம்மை குத்த வரும் கையை விலக்கி, கிடைக்கும் அந்த இடத்தில் மற்ற கையால் தான் குத்துவது என்பது சாதாரணமாக நடக்கும் ஒன்று. 

அனுமனும் அப்படித்தான் செய்யறானாம். தன்னை நோக்கி ஏவப்படும் ஆயுதங்களை இடக்கையால் தள்ளி விட்டு வலக்கையால் அந்த ஆயுதங்களை ஏவிய படையை அடித்து அழித்து விடுகிறானாம். இதுல ஒண்ணு பாருங்க. பெரும்பாலான நேரத்தில் வலது கைப்பழக்கம் இருப்பவர்கள்தான் தடுக்க இடது கையும் அடிக்க தன்னோட வலிமையான கையான வலது கையையும் பயன்படுத்துவாங்க. இடது கைக்காரங்க ரிவர்ஸ். வலது கையால தடுத்து இடது கையால அடிப்பாங்க. 

அனுமனும் இடது கையால் தடுத்து, வலது கையால அடிக்கிறதால அவர் வலது கைப்பழக்கம் கொண்டவர்தான். எனவே அவருக்கு ஆப்சைட் வலக்கை ஆட்டக்காரர்களுக்கு எல்லாம் இருப்பது போல வலப்பக்கம்தான்! நான் சொல்லலை. கம்பனே சொல்லிட்டான்.  

Wednesday, August 13, 2014

Cul De Sac என்ற காரணப்பெயர்!

இன்று வதனஏட்டில் நண்பர் சீமாச்சு ஒரு சுவாரசியமான கேள்வியைக் கேட்டிருந்தார். Cul de sac என்பதற்கு இணையான தமிழ் வார்த்தை என்ன? என்பதே அவர்தம் கேள்வி. கேள்விதனைக் கேட்கும் பொழுதே அவரது முன்முடிவைப் பாருங்கள். இந்தச் சொல் தமிழ் இல்லை, எனவே இதற்கு இணையான சொல் ஒன்று வேண்டும் என்பது இவருடைய முன் முடிவு.

எல்லாமே தமிழ்தான் எனத் தீர்மானமாகச் சொல்ல முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய எனக்கு இந்த முன்முடிவு வருத்தத்தைத் தந்தது. ஆனால் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதன் மூலம் அந்தச் சொல்லும் தமிழ்தான் என நிறுவ ஒரு வாய்ப்பு கிடைத்ததால் சீமாச்சு அண்ணாவுக்கு ஒரு நன்றியை முதலில் சொல்லி விடுகிறேன்.

ஒரு சொல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குச் செல்லும் பொழுது அந்த மொழியின் இலக்கணத்தின்படி சற்று சிதைவது இயல்புதான். அப்படியே ஒரு தமிழ்ச்சொல்லின் சிதைந்த வடிவமே Cul de sac. இதன் மூலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

தொன்மையான கோட்டைகளில் கோட்டை வாயிலில் இருந்து வரும் வழி நேராக இருக்காது. சற்றே திரும்பிச் செல்லும். கோட்டை வாசலைத் தகர்த்து எதிரி உள்ளே வரலாம் என்ற நிலை வந்தால் அந்தத் திருப்பத்தை ஒட்டி மரங்களை வெட்டி நிறுத்தி வழியை அடைத்துவிடுவார்கள். வாசலைத் தகர்த்து வந்த எதிரிப்படை போக வழி இல்லாமல் திணறும்.

பின்னர் எதிரிகள் இந்த மரங்களை தீ வைத்து எரித்து வழியை மீட்டு ஊரினுள் வரத் தொடங்கிய பொழுது ஒரு பழைய மந்திரி மரங்களை விடுத்து கற்தூண்களை அடித்து நிறுத்தி வழியை அடைத்தால் எதிரிகள் வரமுடியாது போகும் என்பதைச் சொல்ல கல்லடித்து ஆக்கு என்றார். அப்படி கற்தூண்களால் வழியை அடைப்பதை அவர் சொன்ன சொற்களின் நினைவாக கல்லடித்தாக்கு என்றே வழங்கினர்.

கோட்டைகளில் நிகழ்ந்தவற்றைப் பார்த்த குடியானவர்கள், தங்கள் நிலத்திற்கு நீர் வர வேண்டும் என்பதற்காக ஓடைகளை கற்களைக் கொண்டு அடைத்து நீரின் போக்கை மாற்றி தம் நிலத்திற்கு வரச் செய்தனர். அவர்களும் கோட்டையில் வழங்கப்பட்ட கல்லடித்தாக்கு என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

முறையான கல்விக்கு வழியில்லாத பாமரர்கள்  காலப்போக்கில் கல்லடித்தாக்கு என்பதைக் கல்லடிச்சாக்கு என மருவி வரும்படி உச்சரிக்கத்தொடங்கினர். இப்படி மருவிய பெயருக்கு ஏற்றபடி சாக்குப் பைகளில் மண்ணை அடைத்து அப்பைகள் சரிந்துவிடாமலிருக்க அவற்றின் மேல் கற்களையும் வைக்கத் தொடங்கினர்.  இப்படிக் கற்களுக்கு அடியே சாக்குப் பைகள் இருப்பதால் அது கல்லடிச்சாக்கு என்பது காரணப்பெயர் என்றே நம்பத்தொடங்கினர்.

நம் நாட்டில் இருந்து மிளகு வாங்கிச் செல்ல வந்த பிரெஞ்சு வணிகர்கள் இது போலத் தடுத்து நிறுத்தப்படும் வழிமுறைக்கு கல்லடிச்சாக்கு என்ற பெயர் இருப்பதைக் கண்டு அவர்கள் மொழியிலும் அதையே எடுத்தாளத் தொடங்கினர். அம்மொழி இலக்கணத்திற்கு ஏற்றவாறு இது கல் டி சாக் என்று வழங்கப்பட்டது. நாளாவட்டத்தில் இந்தச் சொல் ஆங்கிலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றானது.

இது குறித்த ஒரு சுவராசியமான கட்டுக்கதையும் உண்டு. கணவனை வீட்டோடு வைத்துக்கொள்ள ஒரு வழி அவனுக்குப் பிடித்ததை சமைத்துத் தருவது என்பது உலகத்தில் பல நாடுகளில் பழமொழியாகச் சொல்லப்பட்ட ஒன்று. அப்படி அரிசியில் இருந்து கற்களைப் பொறுக்கி அதனை சாப்பாடாகச் செய்து தர உன் கணவன் ஊர் பொறுக்காமல் உன்னுடனே இருப்பான். அவனுடைய வழியானது உன் வீட்டுக்கு வரும் ஒரு வழிப்பாதை ஆகிவிடும். இதைத்தான் கல் எடுத்து ஆக்கு என்பார்கள் என்பதும் இப்படி ஒரு செவிவழிக்கதையே. கல் பொறுக்கின் ஊர் பொறுக்கான் என்ற சொலவாடையும் இப்படி வந்ததே. கல் என்பது சாப்பிடும் பொழுது வாயில் வரும் கல் என்று கொள்ளாமல் மனத்தை நெருடும் விஷயங்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி கல் அடித்து ஆக்கு -> கல்லடித்தாக்கு -> கல்லடிச்சாக்கு -> cul de sac என்று மாறியதே வரலாறு. இன்று முட்டுச்சந்து Cul de sac என்று அழைக்கப்பட்டாலும். அதன் மூலம் நம் தமிழ்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

#எல்லாமேதமிழ்தான்

பிகு: ஆய்வில் முக்கிய பங்காற்றிய உபிச பெனாத்தலுக்கு என் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Thursday, July 31, 2014

விடை கொடு எந்தன் நாடே!

இப்பொழுதுதான் நியூஜெர்ஸி வந்தது போல் இருக்கிறது ஆனால் பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இரண்டே வயது ஆன மகன், மனைவியுடன் நியூயார்க் கென்னடி விமானநிலையத்தில் இறங்கியது இன்னும் நினைவில் இருக்கின்றது. அமெரிக்கா நமக்குப் பிடிக்குமா, இங்கு எவ்வளவு நாள் இருப்போம், திரும்பி விடுவோமா என்று எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல்தான் வந்தோம். சிறிது சிறிதாக அமெரிக்கா எங்களுள் குடியேற நாங்களும் அமெரிக்காவில் வாழத் தொடங்கினோம். வேலைக்கான விசாவில் வந்து என்னால் எந்த வித முயற்சியும் இல்லாமல் அலுவலகமே க்ரீன் கார்ட்டுக்கு ஏற்பாடு செய்ததும், அதை அடுத்து அமெரிக்க குடியுரிமை பெற்று இந்நாட்டு பிரஜையாகவே ஆனதும் கூட அதிக திட்டமிடல் எதுவும் இல்லாமல் இயல்பாகவே நடந்த ஒன்றானது. நாமிருவர் நமக்கிருவர் என்ற கோஷத்திற்கு ஆதரவாக மகளையும் பெற்றெடுத்து குடும்பம் முழுமையானது நியூஜெர்சியில்தான்.

ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்தில் வேலை. ஆற்றின் மறுகரையில் வாசம். நிதமும் அந்த பெருநகரத்திற்குள் சென்று பின் மீண்டு வருவது என்ற வாடிக்கை. நகரத்தினுள் இருந்ததால் கார் எல்லாம் வைத்துக்கொள்ள தேவையில்லாது எங்கு சென்றாலும் ரயில் பயணம் மட்டுமே. இலவச காலை மாலை இதழ்களைப் படித்துக் கொண்டு பொழுது போய் விடும். ஸ்மார்ட் போன்கள் இல்லாத காலம் என்பதால் சகபயணிகளின் முகங்களைப் பார்ப்பதும் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வதும் பேசுவதும் கூட அப்பொழுது சகஜம். பின் படிப்படியாக அவை எல்லாம் போய் காதில் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு மற்ற ஓசைகளைத் தவிர்த்து அனைவரும் தனித்தனியாக ஒரு தீவு போல இருப்பதும் ஆனது இந்த காலகட்டத்தில்தான். பணியிடம் அருகிலுள்ள துணைநகரம் ஒன்றிற்கு நகர, முதலில் ஒரு கார் வாங்கி அதுவும் போதாமல் இரண்டு கார்கள் என்று ஆனபின் இப்படி ரயிலில் போவது என்பது என்றோ ஒரு நாள் அதிசயமாக நடக்கக்கூடிய செயலாகிப் போனது. இப்படி ரயிலை விடுத்து கார்கள் என வாழ்க்கை மாறியது நியூஜெர்சியில்தான்.

ஹட்சன் ஆற்றின் கரையில், ஒரே ஒரு படுக்கையறையுடன் கூடிய புறாக்கூண்டு ஒன்றில்தான் வாழத் தொடங்கினோம். அதன்பின் சற்றே பெரிய வாடகை வீடு, சொந்த வீடு என்று இங்கு வந்த பின் நமக்கான தேவைகளும் வசதிகளும் பெருகப் பெருக அதற்கு ஏற்றாற்போல் இருப்பிடங்களும் வாழ்வு முறைகளும் மாறினாலும் எல்லா முகவரிகளும் NJ என இந்த மாநிலத்தின் பெயர் சுருக்கத்தையே மாறாமல் கொண்டிருந்தன. அமெரிக்க வாழ்வு முறையின் நல்லவை அனைத்தோடு நம் நாட்டுப் பாரம்பரியங்கள் எதையும் விட்டுத் தராத ஒரு புதிய வாழ்வு முறையை இங்குதான் கண்டு கொண்டேன். சரவணபவன் சாப்பாடு, கிராண்ட் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் கடை, கர்நாடக சங்கீதக் கச்சேரி, நவராத்திரி கொலு, நாலு திசைகளிலும் கோயில்கள், இவற்றோடு American Dream என்றழைக்கப்படும் இந்நாட்டின் விழுமியங்களையும் கலந்து கட்டிய கலாச்சாரத்தை உணர்ந்து கொண்டது இந்த நியூஜெர்சியில்தான். 

உறவினர்கள் தவிர்த்துத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாமல்தான் இந்த ஊருக்கு வந்தேன். மெதுவாக உடன் வேலை செய்பவர்கள், வாடகைக் குடியிருப்பில் உடன் வசிப்பவர்கள், எனக்குப் பின் வந்தவர்கள் என எனக்கான ஒரு நட்பு வட்டாரம் அமைந்தது இங்குதான். சமூக ஊடகங்களில் வலைப்பதிவுகள் மூலம் நுழைந்து பேஸ்புக் ட்விட்டர் எனத் தொடர்ந்து இயங்கத் தொடங்கியதும், தமிழகத்தில் இருந்த பொழுது கூட இல்லாத தமிழார்வமும், அது குறித்த எழுதத் தொடங்கியதும், இவை எல்லாம் மூலம் நட்புகள் உருவாகி, உரமேறி, உலகெல்லாம் விரிந்து கிடப்பதும் நான் இங்கு இருக்கும் பொழுதுதான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஊடகங்கள் மூலம் தெரிந்து பின் நேரில் சந்தித்து இன்று என் வாழ்வில் இன்றியமையாத பகுதியாகிவிட்ட, வகிமா எனச் செல்லமாக அழைக்கப்படும் நண்பர்கள் குழாம் அமைந்தது இந்த நியூஜெர்சியில்தான். 

நிற்க. நாளை முதல் நான் நியூஜெர்சியின் குடிமகன் இல்லை. விடிந்தால் விமானம் ஏற வேண்டியதுதான். மேலே சொன்ன அனைத்தையும் விட்டுவிட்டு டெக்ஸஸ் போகிறேன். வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பம் ஆகிறது. 

தகப்பன் கைபிடித்துப் பொருட்காட்சி காணச் செல்லும் சிறுவனைப் போல உற்சாகமாய்ச் செல்கிறேன் எனச் சொல்ல ஆசைதான் என்றாலும் பழகியவை அனைத்தும் விடுத்து மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்ற ஒரு கலக்கத்தோடுதான் செல்கிறேன். இத்தனை வசதிகளோடு போகும் பொழுதே இந்த கலக்கம் என்றால் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் விடுத்துக் கட்டாயத்தினால் புலம்பெயர்ந்தவர்கள் படும் துயரம் எப்படியாக இருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. அப்படிப் புலம் பெயர்ந்த பின்னரும் மனவலிமையோடு தமக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட அத்துணை பேர்களுக்கும் என் வணக்கம்.

அன்று அமெரிக்கா வந்தது போல் இல்லாது, இன்று வெறும் கீபோர்ட் தொலைவில் இத்தனை நண்பர்கள் இருப்பதால் இங்கிருந்து சென்றாலும் தனிமையை உணரப்போவதில்லை. அந்த வலிமையை என் மனத்தில் இருக்கச் செய்த அத்துணை நட்புகளுக்கும் என் நன்றி. 

இந்த மாமாங்கம் இனியவை அத்தனையும் தந்தது போல இனியும் என் வாழ்வு இருக்க உங்கள் வாழ்த்துகளை நாடுகிறேன். 

Thursday, July 24, 2014

கவிதைகளும் கட்டுடைத்தல்களும்!

நமக்கும் புதுக்கவிதைகளுக்குமான உறவு தொடர்ந்து படித்து வரும் வாசக நண்பர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றே. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கண்ணில் பட்டுத் தொலைத்துவிடுகிறது என்பதே தற்'போதை'ய சோகம். அப்படி மாட்டிய ஒன்றுதான் நண்பர் சுரேஷ் (எழுத்தாளர் ராம் சுரேஷ் இல்லை, நண்பன் பெனாத்தல் சுரேஷ் இல்லை, இவர் வேற) எழுதிய கவிதை ஒன்று. படித்த பின் சும்மா இருக்க முடியாமல் அதனைக் கட்டுடைத்து படித்ததற்கான பிராயச்சித்தத்தைத் தேடிக் கொண்டேன். கவிதையை வெளியிட்ட பதாகை இதழுக்கே எழுதியதை அனுப்பினேன். அவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் இதைப் பகடி என வகைப்'படுத்தி'யது பெருஞ்சோகம். 

எழுதியதில் இருந்து ஒரு சின்ன சேம்பிள் 

இனி இந்தக் கவிதை.

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது

காத்திரமான ஆரம்பம். இரண்டு வரிகளில் பூகம்பம். மனிதக்குரங்கு கதவை திறக்கிறது என்பதை அகக்கண்ணால் பார்க்கிற பொழுது தோன்றும் புன்னகை, மனிதனைத்தான் குரங்கெனச் சொல்கிறார் எனப் புரிய வரும் பொழுது ஏற்படும் கோபம், கேவலம் வயிற்றுப்பிழைப்பிற்காக குரங்காட்டியிடம் பணியும் குரங்கினைப் போல தொப்பி அணியச் சொன்னால் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கு உழைக்கும் வர்க்கத் தோழரின் இயலாமை கண்டு ஆதங்கம், தொப்பி அணிய வேண்டி இருந்தால் அணிய வேண்டியதுதானே, விழுமியங்கள் என நமக்கு நாமே போட்டு கொண்டிருக்கும் விலங்குகளை உடைத்து கதவுகளைத் திறந்து விட்ட அந்த பெயர் தெரியாத தோழரின் ஜென் நிலை கண்ட பரவசம் என பல அடுக்குகளில் பல வித தரிசனங்களைத் தரும் வரிகள். மனிதக்குரங்கு என எழுதாமல் மனித குரங்கு என எழுதி நாம் நினைப்பதற்கு மாறாக தோழரின் வாழ்வில் வலி இல்லை என்ற குறியீடு இவ்வரிகளின் சிறப்பம்சம்.
இந்த கட்டுடைப்பு முழுவதும் இங்கே இருக்கிறது. வாசித்து யான் பெற்ற இன்பத்தில் ஒரு சிறு பகுதியைப் பெற்று மகிழவும்.


Tuesday, March 04, 2014

வேறங்கும் உண்டோ விளம்பு (அ) செத்தாண்டா சேகரு

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் என ஒரு சொலவடை உண்டு. அதுவாவது சும்மா இருந்த சங்கு. ஆனா சான்ஸ் கிடைக்கும் போது எல்லாம் வெண்பாவும் வெண்பாமுமா கிறுக்கித் தள்ளிக் கிட்டு இருக்கிறவன் கிட்ட வந்து “மச்சான், இந்த அமுதசுரபி இருக்கில்லடா. அதுல மாசாமாசம் ஈற்றடி தந்து வெண்பா எழுதச் சொல்லறாங்கடா. போட்டி பரிசுன்னு எல்லாம் கிடையாது. ஆனா நாம எழுதற வெண்பா தேர்வாச்சுன்னா அடுத்த இதழில் போடுவாங்களாம்டா. ஒரே ஒரு கண்டிஷன். நேரிசை வெண்பா மட்டும்தான் எழுதலாமாம். நாம ஆளுக்கு நாலு வெண்பா எழுதலாமா?” அப்படின்னு கேட்டா வெளங்குமா? கேட்டது நம்ம சொக்கன். அதனால இந்தப் பதிவையும், இதில் இருக்கும் பாக்களையும் இனி மாதந்தோறும் (இன்ஷா ஜீசஸ்!) வரும் வெண்பாக்களையும் படிச்சுட்டுக் கடுப்பாறவங்க திட்ட வேண்டிய முகவரி அவரோடதுதான். 

"அது என்ன நேரிசை வெண்பா மட்டும்?”, "இன்னிசை வெண்பா என்ன பாவம் பண்ணிச்சு?”, "குறள் வெண்பா மீது ஏன் இப்படி ஒரு குரோதம்?" என்று நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் சொன்ன ஒரே பதில் - "இதான் கண்டிஷன். வேணுமானா எழுது. இல்லைன்னா ஆளை விடு”. இணையத்தில் வெண்பா என்ற பெயரில் தமிழைக் கொத்துபரோட்டா போடுகிறார்கள் என வாத்தியாரிடம் பிராது கொடுக்கும் தோழரும், அவருக்கு ஆமாம் எனப் பின்பாட்டு ட்வீட்டு பாடும் தோழர்கள் சிலரும் இருக்கும் இந்த ரத்தபூமியில் நம்மையும் மதிச்சு வெண்பா எழுதறயான்னு கேட்கும் ரெண்டு சீவன்களில் ஒருத்தரை விரட்டிவிட வேண்டாம் (இன்னொண்ணு உபிச. நானே விரட்டினாலும் ஓட மாட்டான். ஹிஹி.) என்ற நல்லெண்ணத்தில் (பயத்தில் என்பதை இப்படியும் சொல்லலாம்) இந்தத் தருமி, சிவபெருமான் ஸ்டைல் கேள்வி பதில் விளையாட்டை எல்லாம் நிறுத்திட்டு வெண்பா எழுத உட்கார்ந்தேன். 

ஜார்கன் அலெர்ட் (படிச்சாப் புரிஞ்சுடுமோன்னு பயப்படறவங்க, இந்த சிவப்பு நிறப்பத்திகளைத் தாண்டி நேரா அதுக்கும் அடுத்த பத்திக்குப் போயிடலாம்) 

வெண்பா வெண்பான்னு எப்போ பாரு பேசற. ஒரு மாதிரி குன்ஸாப் புரியுது. அது என்ன இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பான்னு யாராவது கேப்பாங்களோ, நாமளும் பதில் சொல்லலாமோன்னு நப்பாசை எதுவும் இல்லாம, யதார்த்தம் தெரியும்கிறதால, நானே கேள்வி வந்ததா நினைச்சு இப்பவே பதிலைச் சொல்லறேன். 

வள்ளுவர் எழுதின மாதிரி ரெண்டு வரியில் இருந்தா அதுக்குப் பேரு குறள் வெண்பா. மூணு வரியில் இருந்தா அதுக்குப் பேரு சிந்தியல் வெண்பா. நாலு வரி வெண்பாவுல ரெண்டு டைப் இருக்கு. ரெண்டாவது வரியோட கடைசியில ஒரு கோடு போட்டு தனிச் சொல் ஒண்ணு வந்தா அதுக்குப் பேரு நேரிசை வெண்பா. அப்படி இல்லைன்னா இன்னிசை வெண்பா. இன்னிசை வெண்பாவில் நாலு வரியும் ஒரே எதுகையோட வரணும். நேரிசை வெண்பாவில் நாலு வரியும் ஒரே எதுகையில் வரலாம் அல்லது முதல் இரண்டு வரிகள் ஒரு எதுகையோடவும், அடுத்த இரண்டு வரிகள் வேற ஒரு எதுகையோடவும் வரலாம். எப்படி இருந்தாலும் தனிச்சொல்ன்னு ஒண்ணு போட்டோமே, அது முதலிரண்டு அடிகளுக்கு எதுகையாத்தான் வரணும். இதான் ரெண்டுக்கும் வித்தியாசம். 

வெண்பான்னா என்ன, எதுகைன்னா என்னன்னு கேட்கிறவங்க நம்ம ஈசியா எழுதலாம் வெண்பா புக்கைத் தேடிக் கண்டுபிடிச்சுப் படிச்சீங்கன்னா இம்மைப் பெருங்கடல் தாண்டி முக்தி பெறும் ஞானமார்க்கம் எல்லாம் கிடைக்காதுனாலும் வெண்பா பத்தி ஒரு ஐடியா கிடைக்கும்.

ஜார்கன் அலெர்ட் ஓவர் 

இந்த மாதத்துக்கான ஈற்றடி - வேறெங்கும் உண்டோ விளம்பு. வேறெங்கும்ன்னு ஆரம்பிக்குதே. இந்த றெ என்பதற்கு ரெ என்பதும் எதுகைதானே, பாரெங்கும் ஊரெங்கும் எல்லாம் போடலாமான்னேன். "நோ நோ அது போங்காட்டம். நான் றெக்கு றெதான் போடறேன். நீயும் அப்படித்தான் எழுதணும்”ன்னு கண்டிஷன் போட்டு பலநாள் கோபத்தைத் தீர்த்துக்கிட்டாரு சொக்கன். (யோசிச்சுப் பாருங்க, மொத எழுத்து நெடிலா இருக்கணும். ரெண்டாவது எழுத்து றெ-வா இருக்கணும். எத்தனை வார்த்தை சொல்ல முடியும் உங்களால?) மேலே சொல்லி இருக்கும் காரணத்திற்காக இதுக்கும் ஓக்கே சொல்லி (கல்யாணம் ஆகி எம்புட்டு வருஷம் ஆச்சு, எல்லாக் கண்டிஷனுக்கும் ஓக்கே ஓக்கேன்னு தலையாட்டறது எல்லாம் நமக்கு இப்போ கைவந்த, ச்சே, தலைவந்த கலைல்லா!) எழுத ஆரம்பிச்சேன். 

இந்த உபிச வேற "எப்போ பாரு சாமி சாமின்னே வர கர்நாடக சங்கீத பாட்டு கேட்கற. இல்லை அதே டாபிக்ல வெண்பா எழுதற. போடா நீ ஒரு போரு"ன்னு அலுத்துக்கிட்டான். அதனால சாமி, பூதம் எல்லாம் வேண்டாம்ன்னு தள்ளி வெச்சுட்டேன். சாமியை விட்டாக் கூட கவுஜன்னு வந்துட்டா காதலை விட முடியுமா? அதனால அதுல ஆரம்பிச்சு அப்புறம் அறச்சீற்றம், அகிலத்துக்கே அட்வைஸ்ன்னு மரபான தலைப்புகளிலேயே எழுதி இருக்கேன். 

சொக்கன் நாலு வெண்பா எழுதச் சொன்னாரு. நம்மூரில் தேர்தல் வேற வருது இல்லையா. அதனால நாலு வாங்குனா ஒண்ணு ப்ரீ என நம்ம பெயருக்குப் பங்கம் வராதபடி அஞ்சு வெண்பா எழுதி இருக்கேன். அஞ்சாமப் படியுங்க. 

காதல் 
சாணாம் வயிற்றிலே சாப்பாடு தானெதற்கு 
பேணாத பாயெதற்கு பேச்செதற்கு- வேணாத
ஊறெதற்கு நீயிருக்க, உன்னண்மைக் கீடுதான் 
வேறெங்கும் உண்டோ விளம்பு

அறச்சீற்றம் - 1
பாபமே இச்சகத்தில் பட்டினிச் சாவுகளே
சாபமே நேர்செய்யாச் சாத்திரமே- கோபமாய்ச்
சீறெந்த நேரமும், சின்னத் தனமிதுபோல்
வேறெங்கும் உண்டோ விளம்பு

அறச்சீற்றம் - 2
மழைநீர்வீண் ஆச்சே மரம்சுள்ளி ஆச்சே
இழையறுந்த தாலாச்சே இன்னல் - பிழையாலே
ஆறெங்கே காணோம் அடர்மணலைத் தான்காணோம்
வேறெங்கும் உண்டோ விளம்பு.

அட்வைஸ் ஆரோக்கியசாமி
அண்டம் முழுதும் அலசித்தான் பார்த்தபின்
கண்டோம் ஒரேயொரு காசினியை - கொண்டோமே
பேறென்றிப் பூமியைப் பேணுவோம், மாற்றுமே
வேறெங்கும் உண்டோ விளம்பு

விலையில்லா போனஸ் வெண்பா.
சீர்பிரித்து நேரிசையில் சிக்கனமாய் நாலுவரி
நீர்எழுதும் பாடல் நிதம்,அதுவே - பார்தன்னில்
பேறென்று சொன்னவொரு பேரிதழின் ஈற்றடிதான்
வேறெங்கும் உண்டோ விளம்பு 

Thursday, January 30, 2014

ஏசி அறையென ஏளனம் வேண்டாம்!

இந்த சொக்கன் இருக்காரே. அவரு சும்மா இல்லாம உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணற மாதிரி ஐடியில் இருந்துக்கிட்டே வெயிலில் வேர்வை சிந்தி உழைச்சாத்தான் உழைப்பு மத்தது எல்லாம் சும்மா, இதுவாடா பொழப்புங்கிற ரேஞ்சில் ஒரு வெண்பாவை எழுதிப் போட்டார்.


வெய்யிலில் சுற்றி வியர்வையில் நீராடிச்
செய்கிற வேலை சிறப்பாமோ? உய்ந்திடவே
மானிடரே நீவிர் மதிமயங்கிக் கம்ப்யூட்டர்
மானிட்டர் பார்த்தா மவுசு

போட்டதுமில்லாமல் அதுக்கு எசப்பாட்டு நான் எழுதப் போறேன்னு ஒரு போஸ்டரை வேற ஒட்டிப்புட்டார். ஆனா நான் வரதுக்கு முன்னாடியே உபிச பெனாத்தல் ஒண்ணுக்கு ரெண்டா ரெண்டு வெண்பா எழுதிட்டான். அதுவும் ரெண்டாவதா எழுதின வெண்பா வெகுஜோர்.


வெயிலைக் குறைசொல்வார் வேலை பார்க்கார்
மெயிலை நோண்டிடும் மேதைகாள் - ஸ்டைலாய்
ஆணிபுடுங்கும் வேலை அவமானப் படுத்திடுவார்
மானிட்டர் பார்த்தே மகிழ்ந்து.
டாக்டர் ஸ்கான்மேனுக்குப் பதிலா இந்த வெண்பா.


வானிலுளோன் வந்தே உயிர்தந்தான் என்றிடுவார்
தேனில் குழைத்துத் திருவாழ்த்தும் சொல்லிடுவார்
மானியமாய்ச் செய்தால் மனமும் குளிர்ந்திடுவார்
சீனிக்குணம் போகும் சீக்கிரமே கோபம்வரும்
வாணிபமாய் ஆகும் வசவாய்ப் பொழிந்திடும்
ஏனிவன் மாறினான் - எல்லாமோர் பில்லாலே!
பாநிறமே மாறிவிடும் - பார்த்தது தான்மறக்கும் -
தானியங்கி எந்திரங்கள் தானாகக் காட்டிடுமே
வீணிவன் செய்வதெல்லாம் வித்தை காட்டுகிறான்.
மானிடர்க்கு உள்ளே மலஞ்சோற்றுக் குப்பைகளை
மானிட்டரில் கண்டு மருந்து!

அதுக்காக இதுக்கு மேல பாட என்ன இருக்குன்னு கச்சேரியை முடிச்சுக்கிட்ட கிருஷ்ணா மாதிரி நாமளும் எழுந்து போயிட முடியுமா? அதான் பார்மேட்டை மாத்தி விருத்தமா எழுதலாம்ன்னு ஆரம்பிச்சேன். ஒரே பார்முலா பயன்படுத்தினாக் கொஞ்சம் சரியா வரலைன்னு ஆசிரியப்பாவா மாத்திட்டேன்.


கண்கள் மூடிக் கஷ்ட மான
… கணக்குப் போட்ட ராமா நுசனும்
பெண்கள் உரிமை பெறவே கவிதை
… பெரிதாய்த் தந்த பாரதி யாரும்
விண்ணில் இருக்கும் விந்தைகள் பற்றி
… விளக்கிச் சொன்ன வாத்தி யாரும்
வெண்மை புரட்சி வெண்ணெய் போல
… வெளிவரச் செய்த குரியன் சாரும்


பாகம் பற்றிப் படிக்கப் புத்தகம்
… பாங்காய்த் தந்த மீனாள் அவளும்*
ராகம் பலவும் ரசித்திடத் தந்த
… ராஜா ரகுமான் அவர்தம் குலமும்
தாகம் தீர்க்கும் தண்ணீர் பெருக
… தானம் செய்த சான்றோர் பலரும்
வேக மாக வேறிடம் செல்ல
… வேலை பார்க்கும் விஞ்ஞா னிகளும்


ஊசிகள் கொண்டு உயிரைக் காத்து
… ஊன்வலி தீர்க்கும் உயர்மருத் துவரும்
காசினி நலம்பெறக் கடுந்தவம் செய்திடும்
…கர்ம வீரரும் கடுமுழைப் பாளிகள்
யோசி அனைவரும் யோதைகள்** தானே
… யோக்கிய மானவர் யோகிகள் தானே
ஏசி அறையென ஏளனம் வேண்டாம்
… ஏகாந்த மாய்நீர் எடுத்து ரைப்பீரே! 

*பாகம் - சமையல். சமைத்துப்பார் என்ற பிரபல புத்தகம் எழுதிய மீனாட்சி அம்மாள்
** யோதைகள் - அறிஞர்

வழக்கமா தேவைப்படும் மோனை ஒன்றாம் ஐந்தாம் சீர்கள் மட்டுமே. ஆனால் மூன்றாவது மட்டும் முடிந்த வரையில் ஏழாவது சீரிலும் மோனை வரும்படி அமைத்ததால் ஓசை நயம் நன்றாக வந்திருக்கின்றது என்று நினைக்கிறேன். உங்க கருத்தை, எதிர் பாட்டை, எசப்பாட்டை சொல்லுங்க!

Friday, January 03, 2014

Booking our blessings!

The other day some friends were discussing about books in Twitter. Some said they loathed giving their books away. While others bemoaned the books that were borrowed but never returned. Some others had a list of books they will never part with while amenable to disposing the rest of their collection. 

My basement is full of books too. My wife may take objection that I did not include rest of the house as she is left constantly picking up the books from all places. Books that belong to me and my kids, avid readers all.

I do not like to give away the books for free for I believe anything that is given for free would not be valued. Case in point are the free laptops that the Tamilnadu Government gave the students in that state. They are now available for purchase here - http://chennai.olx.in/q/sale-government-laptop/c-835.

Compared to my house, my brother's house has a lot more books. Everyone in his household reads and so his house has books everywhere, under every bed, below the stairs and of course in numerous book shelves. I have a great time when I visit him, especially when I fish an unexpected treasure from his collection while hunting for something else. At some point, he decided that there were far too many books for him to manage and wanted to do something about it. What he did then was in line with his personality. He went and bought more books. 

He went to second hand book stores and even a couple of auctions and bought more books. His collection now had books under all subjects - Fiction, Philosophy, Computers, Communism, History, Mystery, et al. He decided to hold a sale. Rather than a garage sale, he wanted to do something different. The first decision was that he would donate the proceeds of the sale to a charity of his choice. 

The next question was where to hold this sale? He had a spark and contacted the company where he used to work. His idea was received well and a friend in the HR department there co-ordinated the event. The event was cleverly planned during the first week of September, soon after the salary was credited in the employees' accounts.  

With an inventory nearing 500 books, the next question was on the pricing. Should they be priced along the lines of how most libraries do - the hardcovers go for a certain price and the paperbacks for a different price? Or should they be sold by weight? Another novel thought caught everyone's fancy. 

A box with a slit was placed at one end of the hall where the books were displayed. The idea was that the employees could choose whatever books they were interested in and decide themselves as to how much they wanted to pay for their choices. They would drop the money in the box and no one but themselves would know of the amount they paid. 

The employees were informed of the event through email detailing how they could choose how much to pay and that the proceeds are for charity. The novel idea created an interest and in much less time than anticipated most of the books were sold. Against an expected collection of Rs.15,000 the sale brought in almost Rs.39,000. My brother topped up and made the total amount to be Rs.40,000 which was then donated to Sambhav Foundation (https://www.facebook.com/pages/Sambhav-Foundation/166563906715082). 

A few days later, my brother was surprised to receive an email from one of the employees who felt he had not contributed sufficiently during the sale for the books he had taken and wanted to pay more.Talk about reverse of Buyer's remorse. That, truly, was the proof that the event touched the right chords in those who participated. 

If this was the path my brother took, I did my part through a different approach. 

I had penned a book on Tamil grammar which was published in India by New Horizon Media Pvt Ltd. (https://www.nhm.in/shop/978-81-8493-744-2.html). Friends, here in the US, requested if I could arrange for the book to be made available for them. 

I had got a shipment of the book and distributed it to them with the request that I would match whatever they contribute for the book and donate it to a charity. All my friends were happy with that plan and contributed generously. 

I added my share and donated an amount of Rs.18,000 to Freedom Trust (http://www.freedomtrustchennai.org), an institution that does yeoman service under the guidance of Dr. S.Sunder. 

We are happy that we did our small part and would be elated if this gives an idea to a few others who are contemplating what to do with their hoard of books. 

PS: This is a translation of the article I wrote in Tamil so that it reaches a larger audience.