Wednesday, October 15, 2014

மீனாக்ஷி ஊரில் காமாக்க்ஷி ஊர்வலம்!

ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி பத்ததி என்கிறார்கள். இப்படி ஒரு நிரலைப் போட்டுத் தந்தது அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். பல காலமாய்த் தொடர்ந்து இதுதான் கச்சேரி என்பதற்கான கட்டமைப்பு. நான் இந்தக் கட்டமைப்பைத் தாண்டி வேறு வடிவங்களில் கச்சேரிகள் கேட்டதே கிடையாது. ஒரு மாலை முழுவதும் ஒரே ராகம் பாடுவார்கள், விடிய விடிய நடக்கும் கச்சேரிகளில் பிரதான ராகம் மட்டுமே பல மணி நேரம் இருக்கும் என்பதெல்லாம் படித்துத் தெரிந்து கொண்டவையே தவிர கேட்டது கிடையாது.
இந்தக் கட்டமைப்புதான் கச்சேரி என்றால் நான் செய்யப் போவது கச்சேரியே இல்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார் டிஎம் கிருஷ்ணா. Like how a conference, that does not adhere to the traditional rules that govern conferences, is called an unconference, his recent performances can be termed as unconcerts or unkutcheris. இதற்கு அக்டோபர் 12ஆம் தேதி ஹூஸ்டனில் நடந்த கச்சேரி, (இப்படி சொல்லலாமா என்றே சந்தேகம் வருகிறதே) இதற்குச் சரியான உதாரணம்.

தொடர்ந்து படிக்க - தமிழோவியம் மின்னிதழ். 

0 comments: